Monday, March 14, 2011

கல்விப் பூ காமராஜ் மலர்ந்த நாள்

கல்விப் பூ காமராஜ் மலர்ந்த நாள்
kamaraj

வெள்ளைக் கதருக்குள்
கறுப்பாய்
ஒரு
பச்சைத் தமிழன் .
நீ
கல்விச்சாலையில்
கற்றது கைமண் அளவு
ஆனால்
கல்வி சாதனையில்
கடந்தது கடல் அளவு.
விருது நகரின் விழுது
வெள்ளந்தி மனது.
நீ
சம்சாரக் கடலில்
மூழ்காத
கட்டைப் பிரம்மச்சாரி.
உன்னிடம்
பந்தமும் இல்லை
பந்தாவும் இல்லை.
நீ
ஏழைக் குழந்தைகளுக்குக்
கூட்டானவன்
ஆனால்
ஏட்டுச் சுரைக்காய்களுக்கு
வேட்டானவன்.
……..
………
………
-ஈரா

கருணாநிதிக்கு பாடம் எடுத்த வாத்தியார் காமராஜர்!

கருணாநிதிக்கு பாடம் எடுத்த வாத்தியார் காமராஜர்!
ட்டமன்றத்தில் திமுக முதற்பெரும் எதிர்க்கட்சியாய் நுழைந்த நேரம்… நாவலர் நெடுஞ்செழியன்தான் எதிர்க் கட்சித் தலைவர். இரவு முழுவதும் பல்வேறு குறிப்புகளைத் தயார் செய்துகொண்டு சென்றிருந்தார். பொருளாதாரத்தில் ஆடம்ஸ்மித் முதல் கார்ல் மார்க்ஸ் வரை அனைத்து மேதைகளும் கூறிய பொன்மொழி களை அழகாக நாவலர் எடுத் துக் கூறிக்கொண்டிருந்தார்.
காமராஜர் அவரைப் பேசவே விடவில்லை. “அவர்கள் சொன்னது இருக்கட்டும்… நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?” என்று கேட்டுக்கொண்டே இருந்தார்.
இரவு முழுவதும் தூங்காமல் இருந்ததாலும், காமராஜரின் இந்தத் ‘தொடர் தாக்குதலாலும்’ நாவலர் நெடுஞ்செழியன் திடீ ரென சட்டமன்றத்திலேயே மயக்கம் போட்டு விழுந்தார்.
அப்போது எங்களுக்கெல்லாம் கட்டுமீறிக் கண்சிவந்த கோபம். ஆனால், இப்போது நினைத்துப் பார்க்கிறபோது, காமராஜரின் அன்றைய கேள்விகளில் ‘நியாய ரேகை’ ஒளிவிடுகிறது.
அடுத்தது கலைஞர் பேச்சு!
அவரும் ‘இசைக்கருவிகள் முழங்கினால் நெற்பயிர் வளரும்’ என்பதற்கு அடுக்கடுக்கான காரணங்களை – ஆதாரங்களை எடுத்துக் கூறிக்கொண்டிருந் தார்.
காமராஜர் கேட்டார்… “சட்டசபையிலே இதை எல்லாமா பேசறது?”
“சட்டசபையில் என்ன பேசுவது என்று நீங்கள் எழுதிக்கொடுங்கள்… நாங்கள் பேசுகிறோம்!” என்று கூறிவிட்டுக் கலைஞர் அமர்ந்தார். திமுக- வின் சட்டமன்றப் பயிற்சிக்கு, காமராஜர் கைப்பிரம்பு தூக்கிய ஒரு ஆசிரியரே!
காமராஜர் பட்டப்படிப்பு படிக்காதவராக இருக்கலாம். ஆனால், அவரது பட்டறிவு, வாளின் கூர்மை போன்றது. அதனால்தான் அந்தப் படிக்காத மேதையைச் சுற்றி படித்த மேதைகளின் கூட்டம் மொய்த் துக் கிடந்தது.
பொதுக்கூட்டத்தில் அவருக்கு முன் பேசுபவர்கள் யாராவது வரம்பு மீறி எதிர்க் கட்சித் தலைவர்களைத் தாக் கினால், தடுத்து நிறுத்திவிடுவார். கவிஞர் கண்ணதாசனும் இந்தக் ‘கில்லட்டின் வாளில்’ பலமுறை மாட்டிக்கொள்வார். “அந்தக் கவிராயரை உட்காரச் சொல்லய்யா” என்று சத்தம் போட்டுச் சொல்வார் காமராஜர்.
அந்தக் காலத்தில் அவரைத் தாக்கி எதிர்க்கட்சிகள் பேசியது போல் வேறு எந்தக் காலத்தி லும் இல்லை எனலாம். ஆனால், “ஆளுங்கட்சிக்கு அரசாங்க வேலை! எதிர்க்கட்சிக்கு என்ன வேலை? நம்மைப் பத்திப் பேசற பிழைப்புதானே? அவன் பிழைப்பிலே ஏன் மண்ணைப் போடறே?” என்று வெளிப்படையாகவே கேட்பார்.
நையாண்டி படத்துக்காக (கார்ட்டூன்) கைது செய்கிற இந்தக் காலத்தையும் பார்க்கிறோம். அவரது காலத்தில் அவரைக் கன்னாபின்னா என்று நையாண்டி ஓவியம் வரைந்தபோது காமராஜர் கூறினார்… “பொம்மையைக் கண்டு ஏன் பயப்படறே? உண்மையைக் கண்டு பயப்படு! போ… போ..!”
‘ஹைதராபாத் வங்கியில் ஒன்றரைக் கோடி ரூபாய் போட்டிருக்கிறார் காமராஜர்’ என்ற வதந்தி பரவி – மேடைப் பேச்சாகி – அறைகூவல் வடிவில் வந்தது.
“எவனோ எதையோ சொல்றான்… விடு! எனக்கு யானைக்கால் வியாதின்னு யாராவது சொன்னா, ஒவ்வொருத்தர் கிட்டேயும் நான் போய் என் காலைக் காட்டிக்கிட்டா இருக்க முடியும்?” என்று கேட்டார் காமராஜர்.
அடேயப்பா! தன்னைப் பற்றியும் தனது நேர்மையைப் பற்றியும் எத்தனை அழுத்தமான நம்பிக்கை! அந்த நம்பிக்கை குறைகிற தலைவர்கள்தாம் தன்னைப் பற்றித் திறனாய்வு செய்கிறவர் தலையைத் திருகி சிதறு தேங்காய்போல வீசிட நினைக்கிறார்கள்.
-அடியார்
நன்றி: ஆனந்த விகடன்

பத்திரிகையாளர்களுக்கு காமராஜர் சொன்ன அறிவுரை!

பத்திரிகையாளர்களுக்கு காமராஜர் சொன்ன அறிவுரை!
சொத்து சுகம் நாடார்
சொந்தந்தனை நாடார்
பொன்னென்றும் நாடார்
பொருள் நாடார்
தான்பிறந்த அன்னையையும் நாடார்
ஆசைதனை நாடார்
நாடொன்றே நாடித் – தன்
நலமொன்றும் நாடாத
நாடாரை நாடென்றார்
-பெருந்தலைவர் காமராஜர் பற்றி கவியரசர் கண்ணதாசன் எழுதிய வரிகள் இவை. இந்த வரிகளுக்கு ஒரு விளக்கவுரை எழுதியதுபோல, விகடன் இந்த வாரம் பெருந்தலைவர் பற்றிய 25 குறிப்புகளைத் தந்துள்ளது.  அந்தக் கட்டுரை…
னம் காட்டும் நிறம். குணம் சொல்லும் உடை. தைரியம் அறிவிக்கும் உடல். வணங்கத் தோன்றும் முகம்… என நாலும் இணைந்த நல்லவர் காமராஜர்! 25 துளிகளுக்குள் அடக்கிவிட முடியாத மகா சமுத்திரமாக வாழ்ந்த கர்மவீரர்!
காமாட்சி என்பது பெற்றோர் வைத்த பெயர். ராஜா என்றே உறவினர்கள் அழைத்தார்கள். காமாட்சியும் ராஜாவும் காலப் போக்கில் இணைந்து காமராஜ் ஆனது. டெல்லிக்காரர்களுக்கு ‘காலா காந்தி’, பெரியாருக்கு ‘பச்சைத் தமிழர்’, காங்கிரஸ்காரர்களுக்கு ‘பெரியவர்’. இன்று வரை பெருந்தலைவர் என்றால் அவரே!
‘இதெல்லாம் என்ன பேச்சுன்னேன்’, ‘அப்படி ஏன் சொல்றேன்னேன்’, ‘ரொம்ப தப்புன்னேன்’, ‘அப்பிடித்தானேங்கிறேன்’, ‘அப்ப பாப்போம்’, ‘ஆகட்டும் பார்க்கலாம்’ போன்றவை அவர் அடிக்கடி பயன்படுத்தும் வாசகங்கள்!
நிறையப் பேரிடம் வரிசையாக ஆலோசனை கேட்கும் பிரதமர் நேரு, கடைசியில் காமராஜர் சொன்னதை அறிவித்து முடிப்பார். உயிரோ டு இருப்பவர்களுக்கு சிலை வைக்கக் கூடாது என்ற கொள்கை கொண்ட நேரு, அதை மீறித் திறந்த சிலை இவருடையதுதான்!
ரசியலில் அவருக்கு குரு தீரர் சத்திய மூர்த்தி. ஆனால், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக காமராஜ் இருக்க… செயலாளராகச் செயல்பட சத்தியமூர்த்தி மனப்பூர்வமாக ஒப்புக்கொண்டார்!
ன்னைப் பாராட்டி யாராவது அதிகம் பேசினால், ‘கொஞ்சம் நிறுத்துன்னேன்’ என்று சட்டையைப் பிடித்து இழுப்பார். அடுத்த கட்சியை மோசமாகப் பேசினால், ‘அதுக்கா இந்தக் கூட்டம்னேன்’ என்றும் தடுப்பார்!
மாதம் 30 நாளும் கத்திரிக்காய் சாம்பார் வைத்தாலும் மனம் கோணாமல் சாப்பிடுவார். என்றைக்காவது ஒரு முட்டை வைத்துச் சாப்பிட்டால் அது அவரைப் பொறுத்தவரை மாயா பஜார் விருந்து!
சினிமா அவருக்குப் பிடிக்காது. ‘ஒளவையார்’ விரும்பிப் பார்த்திருக்கிறார். ‘ராஜபார்ட் ரங்கதுரை’ படத்தைப் போட்டுக் காண்பித்திருக்கிறார்கள். அவர் கடைசியாகப் பார்த்த படம் ‘சினிமா பைத்தியம்’!
சுற்றுப் பயணத்தின்போது தொண்டர்கள் அன்பளிப்பு கொடுத்தால், ‘கஷ்டப்படுற தியாகிக்குக் கொடுங்க’ என்று வாங்க மறுப்பார்!
கன் முதலமைச்சரானதும் அம்மா சிவகாமிக்கு அவருடன் தங்க ஆசை. ‘நீ இங்க வந்துட்டாஉன்னைப் பார்க்கச் சொந்தக்காரங்க வருவாங்க. அவங்களோட கெட்ட பேரும் சேர்ந்து வந்துடும். அதுனால விருது நகர்லயே இரு’ என்று சொல்லிவிட்டார். அந்த வீட்டையாவது பெரிதாக்கி கட்டித் தரக் கேட்டபோதும் மறுத்துவிட்டார்!
ந்தாக்களை வெறுத்தவர். முதல் தடவை சைரன் ஒலியுடன் அவருக்கான பாதுகாப்பு கார் புறப்பட்டபோது தடுத்தார். ‘நான் உயிரோடுதான இருக்கேன். அதுக்குள்ள ஏன் சங்கு ஊதுறீங்க?’ என்று கமென்ட் அடித்தார்!
ரண்டு முறை பிரதமர் ஆக வாய்ப்பு வந்தபோதும் அதை நிராகரித்து லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகியோரை பிரதமர் ஆக்கினார். ‘கிங் மேக்கர்’ என்ற பட்டத்தை மட்டும் தக்க வைத்துக்கொண்டார்!
த்திரிகையாளர்களுக்கு அவரது அறிவுரை… ‘ஒண்ணு, நீங்க பத்திரிகைக்காரனா இருங்க. அல்லது அரசியல்வாதியாவோ பிசினஸ்மேனாவோ இருங்க. மூணாகவும் இருக்க முயற்சி பண்ணாதீங்க!’
மூத்தவர்கள் அரசாங்கப் பதவிகளில் இருந்து விலகி, கட்சிப் பணியாற்ற வேண்டும் என்ற ‘கே.பிளான்’ போட்டுக் கொடுத்த இவரே முதல் ஆளாகப் பதவி விலகினார். ‘எனக்கு எந்தப் பற்றும் இல்லைன்னு காட்டினாதான் மத்தவங்களுக்கு அட்வைஸ் பண்ண முடியும்’ என்றார்!
ங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் பேசுவார். பத்திரிகையாளர் சாவி ஒருமுறை சந்திக்கச் சென்றபோது ஜான் கன்டர் எழுதிய இன்சைட் ஆப்பிரிக்கா என்ற ஆங்கிலப் புத்தகத்தைப் படித்துக்கொண்டு இருந்தாராம்!
வரளவுக்குச் சுருக்கமாக யாராலும் பேச முடியாது. உ.பி-யில் ஒரு பிரஸ்மீட். 50 கேள்விகளுக்கு ஏழு நிமிடத்தில் பதில் சொன்னாராம். இரண்டரை மணி நேரத்தில் எட்டு ஊர்களில் கூட்டம் பேசியிருக்கிறார். இசை விழாவைத் தொடக்கிவைக்க அழைத்தார்கள். ‘இசை விழாவைத் தொடக்கிவைப்பதில் பெருமைப்படுகிறேன்’ என்று மட்டுமேசொல்லி விட்டு இறங்கினார்!
நாற்காலியில் உட்காருவது அவருக்குப் பிடிக்காது. சோபாவில் இரண்டு பக்கமும் தனது நீளமான கைகளை விரித்தபடி உட்காரவே விரும்புவார். முதல்வராக இருந்தபோதும் தலைமைச் செயலகத்தில் பிரத்யேகமாக சோபா வைத்திருந்தார்!
டிகாரம் கட்ட மாட்டார். சின்ன டைம்பீஸைத் தனது பையில் வைத்திருப்பார். தேவைப்படும்போது எடுத்துப் பார்த்துக்கொள்வார்!
றாவது வரை படித்தவர்தானே! என்ற அலட்சியத்துடன் முதல்வர் காமராஜரின் அறைக்குள் அலட்சியமாக நுழைவார்கள் அதிகாரிகள். வெளியே வரும்போது அவர்களின் வால், கால்சட்டைக்குள் மடக்கிச் சொருகப்பட்டு இருந்தது!’ என்று அவரது அறிவாற்றலை மெச்சினார் ஆர்.வெங்கட்ராமன்!
தான் முதலமைச்சரானபோது தன்னை எதிர்த்து முதல்வர் வேட்பாளராக நின்ற சி.சுப்பிரமணியத்தையும் அவரது பெயரை முன் மொழிந்த பக்தவத்சலத்தையும் அமைச்சரவையில் இணைத்துக்கொண்டார்!
னது வலதுகரமாக இருந்த ஜி.ராஜகோபாலன் இறந்தபோது மட்டும்தான் காமராஜரின் கண்கள் லேசாகக் கலங்கினவாம். தாய் சிவகாமி இறந்தபோதுகூட அழவில்லை அவர்!
‘தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகளோடுஒட்டோ, உறவோ இல்லை. இந்தக் கட்சிகளோடு உறவு வைத் துள்ள கட்சிகளோடும் உறவு இல்லை’ – காமராஜர் கூட்டிய கடைசி நிர்வாகக் கமிட்டியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இது. இதை அவரது மரண சாசனம் என்பார்கள்!
விருதுநகர் தொகுதியில் அவர் தோற்றபோது கட்சிக்காரர்கள் அழுதார்கள். ‘இதுதான்யா ஜனநாயகம். ஜெயிச்சவனைக் குறை சொல்லாமல் தோத்துப் போனதைப் புரிஞ்சுக்கிட்டாதான் அடுத்த முறை ஜெயிக்க முடியும்!’ என்று அலட்டிக்கொள்ளாமல் சொன்னவர்.
கோடை காலத்தில் இரண்டே இரண்டு நாட்கள் குற்றாலத்தில் போய் தங்கிவிட்டு வருவார். அவரது அதிகபட்ச சந்தோஷமாக அதுதான் இருந்திருக்கிறது!
ன்பது ஆண்டுகள் முதல் அமைச்சர், பல ஆண்டுகள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த அவர், இறக்கும்போது மிச்சம் இருந்தது பத்து கதர் வேஷ்டிகள், சட்டைகள் மற்றும் நூறு ரூபாய்க்கும் குறைவான பணம்!
ன்ஃப்ளூயன்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்த காமராஜருக்கு 1975 அக்டோபர் 2-ம் தேதி அதிகமாக வியர்த்தது. டாக்டர் அண்ணாமலைக்கு அவரே போன் செய்துவிட்டு, ‘டாக்டர் வந்தா எழுப்பு… விளக்கை அணைச்சிட்டுப் போ’ என்றார். அதுவே அவர் கடைசியாகச் சொன்ன வார்த்தை. டாக்டர் வரும்போது காமராஜர் அணைந்துவிட்டார்!

அரசியல்

அரசியல்

1954ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13ம் தேதி காமராஜர் தமிழக முதலமைச்சராக பதவி ஏற்றார். 1954ஆம் ஆண்டு முதல் 1963ஆம் ஆண்டு வரை முதல்வராக பணியாற்றிய காமராஜர் எளிமையின் சின்னமாக விளங்கினார்.
வீண் விளம்பரங்களை வெறுத்த காமராஜர், கிராம மக்கள் நலனில் பெரிதும் அக்கரை காட்டினார். தமிழகத்திலுள்ள ஒவ்வொரு கிராமத்திற்கும் தானே சுற்றுப்பயணம் செய்து கிராம பிரச்சனைகளை நேரில் கண்டறிந்தார். அதனை நீக்க புத்தம் புதிய செயல் திட்டங்களை தீட்டினார்.
கல்விக்கண் கொடுத்தவர்
ஒருமுறை சுற்றுப்பயணத்தின் போது ஒரு கிராமத்திற்கு காரில் காமராஜர் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆடு மேய்க்கின்ற சிறுவன் ஒருவனைப்பார்த்து காரை நிறுத்தச் சொன்னார். காரைவிட்டு இறங்கி சிறுவனிடம் வந்தார் காமராஜர்.
“தம்பி நீ பள்ளிக்கூடம் போகலியா? ஏன் போகவில்லை?” எனக் கேட்டார்.
“எங்க ஊரில் பள்ளிக்கூடமே கிடையாதே. நான் எப்படி பள்ளிக்கூடம் போகமுடியும்?
உங்கள் ஊரில் பள்ளிக்கூடம் இருந்தால் நீ படிப்பாயா?” என அவனிடம் கேட்டார் காமராஜர்.
“பள்ளிக் கூடத்திற்கு நான் போயிட்டால் சோறு யார் தருவார்கள்?” என எதிர்க்கேள்வி கேட்டான் சிறுவன்.
“ஓ…அப்படியா.. சரி உனக்கு சோறு தந்தால் நீ படிப்பாயா?” என காமராஜர் கேட்டார்.
“ஆமாம்” என்ற சிறுவன், “என் அப்பாவிடம் கேளுங்கள்” என்றான்.
உணவும் கொடுத்து பள்ளிக்கூட வசதியும் செய்து கொடுத்தால் கிராமங்களில் கல்வித்தரம் உயரும் என நம்பிய காமராஜர் சென்னை வந்த உடனே அப்போதைய பள்ளிக்கல்வி இயக்குனர் நெ.து. சுந்தர வடிவேலு அவர்களை அழைத்து “மதிய உணவுத திட்டத்தை” உடனே அமுல் படுத்துங்கள்.
எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. ஏழைச்சிறுவர்கள் கண்டிப்பாகப் பள்ளியில் படிக்க வேண்டும். என உத்தரவிட்டார். இதன் பலனாக 1956 – ம் ஆண்டு ஏழை மாணவர்களுக்கு மதிய உணவுத்திட்டம் மூலம் இலவச மதிய உணவு வழங்கப்பட்டது. 1960ஆம் ஆண்டில் இருந்து ஒன்றாம் வகுப்பு முதல்பள்ளி இறுதி வகுப்பு வரை கல்வி, கட்டணமல்லாமல் இலவச் கல்வியும் அறிமுகப்படுத்தப்பட்டது.
காமராஜர் ஆட்சியில்தான் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு சீருடை வழங்கும் சீரிய திட்டமுறை நடைமுறைப்படுத்தப்பட்டது. சுமார் 30 ஆயிரம் ஆரம்பப்பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன.
ஏழை, பணக்கார மாணவர்கள் என்ற வித்தியாசம் கல்வி நிலையங்களில் இருக்கக்கூடாது என்பதை உணர்ந்த காமராஜர் சீருடை வழங்கும் சீரிய இலவச்ச் சீருடை வழங்குவதன் மூலம் ஏழை மாணவர்களுக்குக் கல்வியில் நாட்டம் ஏற்படவும் வழிவகுத்தார்.
அரசியல் பணி
மாநில முதல்வர் இருக்கும் தகுதி பெரும் பணக்கார்ர்களுக்கும் மிட்டாமிராசுதார்ர்களுக்கும் பட்டதாரிகளுக்கும் மட்டுமே உண்டு என்பதை பொய்யாக்கி சாமானியனும் மாநில முதலமைச்சர் ஆகலாம் என்பதை நிரூபித்துக் காட்டிய முதல் மனிதர் காமராஜர்தான். ராஜாஜியின் குலக்கல்வித் திட்டத்திற்குச் சாவு மணி அடித்தது அவரது மிகப் பெரியச் சாதனை.
பதவி ஆசை அற்றவரே பதவியில் இருக்க வேண்டும் என்பதற்காகவும்நேருவிற்குப் பிடிக்காதவர்களைப் பதவியிலிருந்து ஒழித்துக் கட்டவும் காமராஜர் பதவி விலகும் திட்டம் என்ற திட்டத்தைக் கொண்டுவந்தார். இது அவரது அரசியல் நுண்ணறிவுக்கு எடுத்துக்காட்டு ஆகும். நேருவுக்குப் பின் லால்பகதூரைப் பிரதமராக்கியது அவரது அரசியல் திறமைக்கு தக்கச்சான்று ஆகும்.
“இந்தியாவைக் காப்போம் – ஜனநாயகத்தைக் காப்போம்” என்பது விருதுநகர் வீர்ரின் வேத வாக்கு.
அணைக்கட்டுகள்
காமராஜர் ஆட்சிக்காலத்தில் சாத்தனூர் அணை கட்டப்பட்டது. இதன் மூலம் 20,000 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெற்றன். இந்தத் திட்டத்திற்காக சுமார் இரண்டரைக் கோடி ரூபாய் செலவானது.
மதுரையில் உள்ள வைகை அணையும் இரண்டரைக் கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் 20,000 ஏக்கர்நிலம் பாசன வசதி பெற்றது.
சுமார் 3 கோடி செலவில் அமராவத அணை ஏற்படுத்தப்பட்டது. இதன் மூலம் 47,000 ஏக்கர் பாசன வசதி பெற்றது.
நெல்லை மாவட்டம் தாரிரபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மணிமுத்தாறு அணை காமராஜர் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் 20,000 ஏக்கர் நிலம் கூடுதல் பாசன வசதி பெற்றது.
1,100 ஏக்கர் பாசன வசதி பெரும் வகையில் வாலையார் அணை 1 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்பட்டது.
இரண்டு கோடி ரூபாய் செலவில் கிருஷ்ணகிரி அணையும் காமராஜர் ஆட்சிக் காலத்தில்தான் ஏற்படுத்தப்பட்டது.
சுமார் 2 லட்சம் ஏக்கர்கள் பாசன வசதி பெறும் வகையில் 10 கோடி ரூபாய் செலவில் கீழ்பவானித் திட்டம் காமராஜர் ஆட்சிக் காலத்தில்தான் ஏற்படுத்தப்பட்டது.
சுமார் ஒன்றரைக்கோடி ரூபாய் செலவில் புள்ளம்பாடி திட்டம் உருவாக்கப்பட்டதால் சுமார் 22 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றன.
சுமார் 75 லட்சம் ரூபாய் செலவில் தென்னாற்காடு மாவட்டம் கோமுகி ஆற்றுத் திட்டம் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் 8,000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்றது.
இவை தவிர கன்னியாகுமரி மாவட்டம் பேச்சுப்பாறை அணை, கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஆழியாறு, பரம்பிக்குளம் அணைகளும் காமராஜர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டவை ஆகும்.
நீலகிரி மாவட்டத்திலுள்ள குந்தா அணையும் கர்மவீர்ர் ஆட்சியில் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
தொழில் நிறுவனங்கள்
காமாரஜர் ஆட்சிக் காலத்தில் பல்வேறு தொழிற் சாலைகள் ஏற்படுத்தப்பட்டன. குறிப்பாக சென்னை கிண்டியிலுள்ள தொழிற்பேட்டைகள், நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேணன் ஆகியவை காமராஜர் காலத்தில் உருவாக்கப்பட்டவை.
இவை தவிர சிமென்ட் ஆலைகள், காகித உற்பத்தி ஆலைகள், அலுமினிய உற்பத்தி ஆலைகள், மாக்னசைட், சுண்ணாம்புக்கல் சுரங்கங்கள், உலைக்கூட ஆலைகள், ரப்பர் தொழிற்சாலைகள் ஏற்படுத்தப்பட்டன.
மேலும் பாதைகள் அமைக்கும் எஞ்சின்கள்,சைக்கிள்கள், தானியங்கி ஈரிருளிகள், தட்டச்சுப் பொறிகள், ஸ்விட்ச் கியர்கள், எலக்ட்ரிக் கேபிள்கள், மருத்துவ அறுவைச் சிகிச்சை கருவிகள், தொடர் வண்டிப் பெட்டிகள், பார உந்து வாகனங்கள் ஆகியன காமராஜர் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டவையாகும்.
இவைதவிர எண்ணூர் அனல் மின்சார நிலையம், தூத்துக்குடி துறைமுகம் போன்ற மிகப்பெரிய தொழில் திட்டங்களும் காமராஜர் ஆட்சிக் காலத்தில்தான் உருவாக்கப்பட்டன.

புகழ்

புகழ்

தங்கமே! தண் பொதிகைச்
சாரலே! தண்ணிலவே!
சிங்கமே! என்றழைத்துச்
சீராட்டுந்தாய்தவிரச்
சொந்தமென்று ஏதுமில்லை!
துணையிருக்க மங்கையில்லை!
தூய மணி மண்டபங்கள்
தோட்ட்கள் ஏதுமில்லை!
ஆண்டிகையல் ஓடிருக்கும்
அதுவும் உனக்கில்லையே!
கவியரசர் கண்ணதாசன்
காமராசர் தாலாட்டு.
மனித நேயத்திற்கு இன்னொரு பெயர் காமராஜர். காமராஜரின் வாழ்க்கையென்பது ஒரு சாதாரண மனிதரின் வாழ்க்கையல்ல. வாழ்க்கை என்ன என்பதன் விளக்கம் தந்த வாழ்க்கை என்ன தனி மனித வாழ்விலும், பொது வாழ்விலும் அவர் வாழ்ந்து காட்டிய வழிமுறைகள் காந்தியடிகளின் ‘சத்ய சோதனை’ போன்றதாகும். அதனால் தான் காமராஜரையும், காந்தியடிகளோடு ஒப்புமைப்படுத்தி ‘தென்னாட்டுக் காந்தி’ என்று போற்றிப் புகழுகின்றோம்.
ஜூலை 15. காமராஜரின் பிறந்தநாள். எப்போதும் போல் வருகின்ற பிறந்த நாளல்ல. இந்த பிறந்த நாள் நூற்றாண்டின் நினைவுகளைத் தரும் இனிய நாள்.
அவர் படித்த வகுப்பு ஆறு. இப்பொழுது கடக்கிறது அவருக்கு வயது நூறு. அவருடைய சாதனைச் சரித்திரம் நூறு ஆண்டுகள் அல்ல. நூறு நூறு ஆண்டுகள் இன்னும் தொடரும்.
இனிய நூற்றாண்டில் மலரும் நினைவுகளாய் சில நினைவுகள். அவரது வாழ்க்கைப் புத்தகத்தின் சில பக்கங்களை உங்கள் பார்வைக்கு இங்கே பந்திவைக்கிறேன்.

பேச்சு சாதனைகள்

பேச்சு சாதனைகள்

”எண்ணச் சுதந்திரம் வேண்டும் – அதை
எழுதச் சுதந்திரம் என்றென்றும் வேண்டும்
சொல்லச் சுதந்திரம் வேண்டும் – வெறும்
சோற்றுச் சுதந்திரம் யாருக்கு வேண்டும்”
என்றார் ஒரு கவிஞர். எண்ணியதை எண்ணியபடி எழுதுவதற்கும் எண்ணியதை எல்லோர்க்கும் எடுத்துச் சொல்வதற்கும் சுதந்திரம் இருக்கத்தானே வேண்டும்.
ஆனால் இந்தச் சுதந்திரத்தை நியாயத்திற்கும் நேர்மைக்கும் உண்மைக்கும் புறம்பாகச் சிலர் பயன்படுத்தி விடுகிறார்கள். எதற்காக எல்லாமே சுயநலத்திற்காகத் தான்.
தமிழ் நாட்டில் மூன்று முறை முதல் அமைச்சராக இருந்த காமராஜர் அவர்கள் பெரிய பேச்சாளர் அல்ல. ஆனாலும் பேசத் தெரியாவரும் அல்ல. எது சொன்னாலும்
”ஆகட்டும். பார்க்கலாமின்னேன்” – என்று ஒரு வரியில் எதற்கும் பதில் அளித்து விடுவார் என்பார்கள்.
காமராஜர் பேச வேண்டிய சந்தர்ப்பங்களில் பேசாமல் இருந்ததில்லை. அவர் தொண்டனாக இருந்த காலங்களில் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் தொண்டிற்கும் உழைப்பிற்கும் முக்கியத்துவம் கொடுத்தார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவரான பின்னர், காமராஜர் அளவோடு, சுருக்கமாகப் பேசினார். தமிழக கேள்விகளுக்குத் தக்க பதில் அளித்ததோடு, தேர்தல் பொதுக்கூட்டங்களில் சற்று நேரம் அதிகமாகவே, விளக்கமளித்துப் பேசினார்.
”தண்ணீர் மழையாகப் பெய்யுது. அது ஆறாக ஓடுது. அப்படி ஓடுகிற தண்ணீரை அணைக் கட்டித் தேக்கி வைக்கிறோம். பிறகு அங்கு வாய்க்கால் வெட்டி அதன் மூலம் தண்ணீரை விவசாயத்துக்கு அனுப்புகிறோம். விவசாயத்துக்குப் பயன்பட்டபோது, மிஞ்சும் தண்ணீர் சமுத்திரத்துக்கு போகிறது.
பிறகு என்ன ஆகிறது? இந்த மழைநீர் வற்றி, ஆவியாகி, மேகமாக மேலே போய மறுபடியும் மழையாகக் கொட்டுகிறது. இப்படித்தானே அது பழையபடி சுற்றிக்கொண்டே வருகிறது. அதைத் தடுத்த நிறுத்த முடியும என்ன? அதே போல் தான் பணமும். அது நம்மைச் சுற்றித் தான் வர வேண்டும். ஒரே இடத்திலே அது தேங்கிவிடக்கூடாது.
”மழையில்லை என்றால் யாரும் வாழ முடியாது. மழைக்கு இவ்வளவு பெருமை எப்படி ஏற்பட்டதோ, அதே மாதரி தான் பணத்துக்குப் பெருமை ஏற்பட்டுள்ளது. மழையைப்போலவேதான் பணமும் சுற்றிக்கொண்டு வர வேண்டும். மழை எல்லா இடத்திலும் பெய்கிறமாதிரி, எல்லா இடத்திலேயும் செல்வம் பரவலாக இருக்க வேண்டும். ஒருவரிடத்தில் மட்டும் அது தேங்கக்கூடாது. அதை ஒருஏர் மட்டுமே சொந்தமாக உபயோகிக்கக்கூடாது.”
அகில இந்திய காங்கிரஸ் கமித்டித் தலைவர் ஆன பின்பு காமராஜர் இந்தியா முழுவதிலும் சுற்றுப்பயணம் செய்து எல்லா மாநிலங்களுக்கும் சென்று காங்கிரஸ் கட்சிக்காகப் பேச வேண்டிய நிலைமை அவருக்கு ஏற்பட்டது. பெருந்தலைவர் காமராஜரின் பேச்சுக்களிலிருந்து சில பகுதிகளை இங்கே கொடுத்துள்ளேன்.
காமராஜரைத் தமிழ் நாட்டின் முதலமைச்சர் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும்படி எல்லோரும் வற்புறுத்திய போது,
”எனது நிர்வாகத்தில் நண்பர்களோ கட்சிக்கார்களோ, உறவினர்களோ, சட்டமன்ற உறுப்பினர்களோ தலையிடக்கூடாது. அப்படி நீங்கள் தலையிடாமல் இருந்தால் நான் முதலமைச்சர் பதவியை ஏற்றுக்கொள்கிறேன்” – என்று கூறினார்.
”ஏழைகளுக்குச் சாப்பாடு போட்டால் அவன் பரம்பரையாகச் சாப்பிட்டானா என்று கேட்பது நியாயமா? ஏழைகளின் குழந்தைகளை வாட விடுவது முறையா? அவர்களைப் படிக்க வைத்தால் தானே முன்னுக்கு வருவார்கள். பணக்காரப் பையன்கள் படிக்கவா நான் முதல் மந்திரியாக இருந்து ராஜாங்கம் நடத்தறேன்?”
”பள்ளிக்கூடங்களைத் திறப்பது பெரிய காரியமில்லை. குழந்தைகளுக்கு நல்ல கல்வி அறிவை ஊட்டித் திறமைசாலிகளாக்க வேண்டும். அதற்குத தகுந்த ஆசிரியர்கள் பொறுப்புடன் நல்ல முறையில் கல்வி புகட்டினால் குழந்தைகளின் அறவு வளரும் பெற்றோர்கள் ஆசிரியர்களை நம்பித் தான் குழந்தைகளை அனுப்புகிறார்கள்.
”ஒரு யானை அதற்கு ஏற்றபடி சாப்பிடுகிறது. அது சாப்பிடும்பது ஒரு கவளம் சிந்திவிடுகிறது. அந்த ஒரு கவளம் லட்சக்கண்க்கான எறும்புகளுக்கு ஆகாரமாக்க் கிடைக்கிறதே! யானைக்கு ஒரு கவளம் அதன் சாப்பாட்டில் குறைவதால், அது கவலைப்பட வேண்டியதில்லை.
அதே போலத்தான் பணக்கார்ர் கொஞ்சம் வரிப் பணம் கொடுத்தால், அதனால் ஒன்றும் குறைந்து போய் விடாதே! அரசாங்கம் பணக்கார்ர்களுக்கு போடுகிற குறைந்த அளவு வரியைக் கொண்டே, சோற்றுக்குக் கூட இல்லாமல் பிடுங்குகிறோம் என்று பீதியைக் கிளப்ப வேண்டாம்.
பலபேர்களின் பட்டினி தீர அவர்தம் நலவாழ்வுக்கு வழி செய்ய அந்த வரிப்பணம் பயன்படுமே!
”பொருளாதாரத் துறையில் தாழ்ந்த நிலையில் இருப்பவர்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்து முன்னேறி இதற்குத் தொழிலும், விவசாயமுமு நல்ல முறையில் வளர்ச்சிப் பெற வேண்டும். அப்போதுதான் தொழில் வாய்ப்புகள் பெருகி, மக்களிடம் பணப்புழக்கம் அதிகரிக்கும்.”
”காங்கிரஸின் சமதர்மக் கொள்கை பிடிக்காமல் பணக்கார்ர்களும் பெரிய முதலாளிகளும் காங்கிரஸ் மீது கோப்ப்படுகிறார்கள். ஆனால் ஏழைகளுக்குக் காங்கிரஸ் மீது கோபம் வரலாமா?
”நாட்டில் கவலையற்ற சமுதாயத்தை அமைக்க வேண்டும். அதையும் நாம் வாழ் நாளிலேயே செய்துவிட வேண்டும். உணவு, வீடு, கல்வி, வசதி எதுவும் இல்லை என்ற புகாரே மக்களிடம் இருக்கக்கூடாது”
” மாணவர்கள் அரசியலில் ஈடுபட வேண்டியதில்லை. அரசியல் தான் நாட்டின் லட்சியத்திற்கு அஸ்திவாரம் எனவே மாணவர்கள் அதைப் பற்றி நன்கு தெரிந்து செய்ய வேண்டும்.
ஆசிரியர்களைப் பற்றி சிந்திக்காமல் இருப்பது ஆபத்து. மாணவர்களைக் கொண்டு அரசியல் பலம் பெற நான் விரும்பவில்லை. நாங்கள் மாணவர்களை அரசியலுக்குப் பயன்படுத்துவோம் என்ற சந்தேகம் யாருக்கும் வேண்டாம்.”
”நம் சுகத்தைப் பற்றி நமக்குக் கவலை இல்லை. நாம் குழந்தைகளைப்ப பற்றிபக் கவலைப்படவேண்டும். கழந்தைகள் நல்வாழ்வு வாழ வேண்டும். குழந்தைகளுக்கு நிறையப் பள்ளிக் கூடங்கள் ஏற்படுத்தியிருக்கிறோம். மதிய உணவு வழங்குகிறோம். ஆணியும் (சீருடை) கொடுக்கிறோம்.”
”நம்மால் நிலையான அரசு அமைக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை. எப்படியாவது யாரோடு சேர்ந்தாவது ஆட்சியில் பங்கு பெற முயற்சிக்கக்கூடாது.”
காங்கிரஸ் என்னும் மரம் நாட்டு மக்களுக்கு நல்ல நிழலைத் தந்துகொண்டு இருக்கிறது. இப்பொழுது சிலர் இதை வெட்டி விட வேண்டும் என்கிறார்கள். இதற்குத் தகுந்தாற்போல இன்னொரு மரம் இருந்தாலும் பரவாயில்லை.
இதைத் தவிர வேறு மரமே கிடையாது! இந்நிலையில் இருக்கின்ற மரத்தையும் வெட்டி விட்டு வெயிலுக்கு அழைத்துச் செல்லப் பார்க்கிறார்களே!! அவர்கள் பின்னால் நீங்கள் போகலாமா?”
நாம் நம் உழைப்பைத் தந்து அதற்கு ஊதியமாகப் பெறும் ரூபாய் நோட்டுக்கள் வெறும் காகிதங்களே. ஆனாலும் அதை நிறை மனதோடு ஏற்கிறோம். சேமித்து வைக்கிறோம். எந்த நம்பிக்கையில்?
ஒவ்வொரு காகித நோட்டிலும் நாட்டின் அரசு ஒரு சத்தியப் பிரமாணம் செய்திருக்கிறது. அந்தக் காகிதத்தில் குறிக்கப்பட்டுள்ள தொகையை என்றும் எந்தப் பொருளாக விரும்புகிறோமோ அந்தப் பொருளாகப் பெறும் உரிமை நமக்குத் தரப்பட்டு இருக்கிறது. அரசுகள் மாறலாம். தலைவர்கள் மாறலாம். கொள்கை வேறுபாடுகள்ள அரசுகள் அமையலாம். ஆனால் தலைமை வங்கி (ரிசர்வ் பேங்க்) அல்லது நீதித்துறை அளித்த ‘சத்தியவாக்கு’ என்றும் மாறாது. மாறக்கூடாது.”
”மாணவர்கள் கல்விகற்பது வெறும் அறிவு வளர்ச்சிக்காக மட்டும் பயன்படாமல் நாட்டு முன்னேற்றத்துக்கும் பெரிதும் உதவுகிறது. பல்வேறு விஞ்ஞான தொழில் நுணுக்க நிபுணர்கள் மாணவர்களிடமிருந்து தோன்றி அபிவிருத்தி வேலைகளுக்குப் பயன்பட்டு வருகின்றனர்”
எனினும் நமது வளர்ச்சிக்கு, வேகத்துக்கு அது போதுமானதாக இல்லை. எத்தனையோ பற்றாக்குறைகளைப் போலவே, நிபுணர்கள் பற்றாக்குறையும் உள்ளது. மாணவர்கள் நன்கு கற்று, விஞ்ஞான தொழில்நுட்ப மேதைகளாகி நாட்டுக்குப் பாடுபட வேண்டும்.”
சமதர்மம் என்றால் ஏழ்மையைச் சமமாகப் பகிர்ந்து கொடுப்பது என்று அர்த்தமல்ல. மேலும், மேலும் உற்பத்தி செய்தால், அதே சமயத்தில் அதனால் ஏற்படுகின்ற செல்வம் ஒரு ணிலருடைய இரும்புப் பெட்டிகளில் சென்று ஐக்கியமாகி விடாமல், பலருக்கும் பயன்படும் வித்ததில் பரவலாகும்படி பார்த்துக் கொள்ளுதல், இவை தான் சமதர்மத்தின் நோக்கம்.”
”ஜனநாயக சோஷலிசமே இந்திய நாட்டிற்கு என்றும் ஏற்றது. முன்னேற்றம் அடையச் செய்யுற ஒரு காரியத்தை அந்த அம்மா மறு பரிசீலனை செய்யனும். அதி தான் பத்திரிக்ககைகளைத் தண்க்கை செய்யுறதாலே நாட்டிலே நடக்கிற உங்கள் நிலைமை அந்த அம்மாவுக்குக் கூடத் தெரியாமல் போய் விடும். கடைசிலே அது அவுங்களுக்கே ஆபத்தா முடியும்.”
”மக்களுடைய மனதில் அரசாங்கம் என்று ஒன்று தனியாக இருக்கிறது. அரசாங்கமே எல்லாப் பொறுப்புக்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் அவர்களுக்கு இருக்கிறது. இந்த எண்ணம் மாற்றப்பட வேண்டும்.”
”நமக்கு நல்ல திறமை இருக்கிறது. ஆனால் நாம் வீணாகச் சோம்பலாகத் திரிகின்றோம். சோம்பலுக்கு இடம் கொடுக்கக்கூடாது. ஏன் ஐயா சும்மா திரிகிறாய் என்று கேட்டால், நம் தலையெழுத்து, நமக்கு இவ்வளவுதான் என்று கூறுகிறோம். இதெல்லாம் வீண் பேச்சு. இப்படிப் பேசிக் கொண்டே இருந்தால் முன்னேற முடியாது.”
”நம் தாய்மார்கள் படித்துவிட்டால், நாட்டிலுள்ள தொந்தரவுகள் நீங்கி விடும். நாம் சம்பாதித்த சுதந்திரமும் நல்ல முறையில் பாதுகாக்கப்படும்.”
”சம்பாதிக்கட்டும். வரி கொடு என்றால் மாட்டேன் என்பதா? நாங்கள் ஆலையை மூடி விட்டால் சம்பாதிக்க் முடியுமா? மின்சாரத்தை நிறுத்தி விட்டால் தொழில் பங்கை முடியுமா?
ஆகவே, அதிர்ஷ்டம், சாமர்த்தியம் என்றெல்லாம் சொல்லாமல் வரி கொடுங்கள் என்று கேட்கிறோம். இது தவறா? மாடு மேய்ப்பவன் அப்படியே இருக்கட்டும் மென்று சொல்லிக்கொண்டு ஆட்சி நடத்த நாங்கள் தயார் இல்லை. அதற்கு வேறு ஆளைப் பாருங்க”
”மகாத்மா காந்தி எதை இலட்சியமாக் கொண்டிருந்தாரோ அது தான் நம் இலட்சியமும் கவியரசர் பாரதி என்ன சொன்னார்? ”தனியொருவருக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்” – என்று பாடினார்.
மகாத்மா காந்தியின் உள்ளத்தைப் பாட்டாக எடுத்துக் காட்டினார். நமது மாபெரும் தலைவர், நேருஜி ”ஏழைகளின் நல்வாழ்வு” – என்ற இலட்சியத்தை வைத்துக் கொண்டு தான் காங்கிரஸ் ஆட்சிக்குத் தலைமை ஏற்றுக்கொண்டார்.
”எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்று இப்போது பாடுகிறார்களே. அதை மகாத்மா காந்தி தான் உருவாக்கினார்; ஏழைகள்தான் இந்த நாட்டின் கடவுள் என்று அவர் குறிப்பிட்டார். அவர்களுக்குத் தரித்திர நாராயணர் என்று பெயர் வைத்தார். அவர்களுக்காக ஒரு ராஜ்யத்தைச் சம்பாதித்துக் கொடுத்தார்.”
நாட்டிலே பெண்கள் விழிப்பு அடைந்தால் குடும்பம் முன்னேறும். கிராமங்ள் முன்னேறும். ஏன், தேசமே முன்னேறும்.”
”ஒருவன் பட்டினியாக இருக்கிறான் என்றால் அவன் யார்? என்ன சாதி? என்றெல்லாம் பார்த்துக் கொண்டு இருக்க முடியுமா?
திராவிடன் பசி ஒருவிதமாகவும் ஆரியன் பசி வேறுவிதமானதாகவுமா இருக்கும்? பட்டினி எல்லோருக்கும் ஒரே மாதிரி தான் இருக்கும். ஆகவே பாரபட்சமின்றி எல்லோரது பட்டினியையும் போக்க வேண்டும்.”
”இந்தி மொழிகள் விஷயத்தைப் பொறுத்தவரை இந்தி மோழி பேசுகிறவர்கள்ப் பற்றி நாம் அறிந்து கொள்ள நாம் இந்தி மொழியைப் படிக்கணும். நம்மைப் பற்றி அறிய அவர்கள் நம் தமிழ் மொழியைப் படிக்கணும்.”
”பழைய காலத்தில் காசியாத்திரை போவதென்றால் சிரமம். பல மாதங்கள் ஆகும். இப்போது டில்லிக்கு போக வேண்டுமானாலும் சீக்கிரத்தில் போகலாம். ரயில், மோட்டார், ஆகாய விமானம் எல்லாம் இருக்கின்றன.
அதாவது நாட்டில் இன்று பெரிய மாறுதல்கள் ஏற்பட்டிருக்கின்றன. இதை உணர்ந்து நாம் வாழவேண்டும். ஆனால் சிலர் இதை உணர மறுக்கிறார்கள். ட்டை வண்டியில் சவாரி செய்த காலம் தான் உயர்ந்தது என்கிறார்கள். அவர்களை எப்படித் திருத்துவது?”
”வயிற்றுக்கு முதலில் கஞ்சி கிடைத்தால் போதும். பாயசம், வடை எல்லாம் பிறகு பார்த்துக்கொள்ளலாம். பட்டினி இருப்பவர்கள் என் மேலே கோப்ப்படுவது எனக்குப் புரிகிறத். ஆனால், தினசரி மூன்று வேளை வயிறாரச் சாப்பிட்டுக் கொண்டு, அதே சமயத்தில் பாயசத்துக்குப் பால் இல்லை, அல்வாவுக்குச் சர்க்கரை இல்லை என்பவர்கள் கோப்ப்படுவது தான் எனக்குப் புரியவில்லை.”
”புதிய சமுதாயத்தை அமைக்க வேண்டுமானால் பழைய பழக்க வழக்கங்களை அப்படியே வைத்துக் கொள்ள முடியுமா? அதற்காக்ப் பழையதெல்லாம் தப்பு என்று சொல்ல்லாமா? கூடாது. ஒரு புது வீட்டுக்குக் குடித்தனம் போகும்போது, பழைய டின், துடப்பம், ஓட்டை உடைசல் எல்லாவற்றையும் விட்டு விட்டு நல்லதை மட்டும் எடுத்துக் கொண்டு போகிறோம். அல்லவா? அது போல் பழமையில் இருக்கிற நல்ல விஷயங்களை எல்லாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
”நமது சமுதாயத்தில் உழைப்புக்கு மரியாதை இல்லை. உழைப்பவனைக் கூலிக்காரன் என்று கூறுகிறோம். ஆனால் கடத்தல்காரனை, ”கடத்தல் மன்ன்” என்று அரசர் அந்தஸ்த்தில் அழைக்கிறோம்.”
”சுதந்திரம் வந்தால் நாட்டில் மக்கள் நிலை உயரும் என்பதை அறிந்தே பலர் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்காகவே மகாத்மா காந்தியின் தலைமையில் பலர் ஜெயிலுக்குச் சென்றனர். ஆனால் யாரும் மந்திரியாவதற்கு ஜெயிலுக்குப் போகவில்லை.”
பல்வேறு மொழிகள் பேசுகிறவர்களும் பழக்க வழக்கங்கள் உள்ளவர்களும் இருப்பதினால் ஒரு நாட்டை வெவ்வேறு பிரிவுகள் என்று சொல்லவோ, பிரிக்க வேண்டும் என்று சொல்லவே முடியாது.”
”என்னால் சார்ந்திருக்க முடியாது. இப்போதே பதவியில் உட்கார வேண்டும் என்றால் முடியுமா? நெல்லை இன்றைக்கு விதைத்து விட்டு, நாளையே அறுவடை செய்ய வேண்டுமென்று அரிவாளை எடுத்துக்கொண்டு போய் நின்றால் நடக்குமா?”
”எப்போதும் தேவை ஏற்படுவது வளர்ச்சிக்கு அடையாளமு முன்பு எல்லாம் கிராமங்களில் சட்டை கூடப் போட மாட்டார்கள். இப்போது அப்படி இல்லை. எல்லோரும் சட்டை போடுகிறார்கள்.
ஆகவே நிறையத் துணி வேண்டியிருக்கிறது. துணிகளைத் தயாரிக்க ஆலைகள் வைக்க வேண்டும். ஆகவே தேவை ஏற்படுகிறதென்றால் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது என்று அர்த்தம்.”
வடக்குத் தெற்கு என்று வேற்றுமை வேண்டாம். இந்திக்காரரோடு பேசுவதற்கு நாம் இந்தி கற்றுக் கொள்ள வேண்டும். அதே போல் நம்மிடம் பேசுவதற்கு இந்திக்கார்ர்கள் அவசியம் தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும்.
”வட இந்தியாவையும் நான் பார்த்திருக்கிறேன். தமிழ் நாட்டிலோ மூலைமுடுக்குகளில் உள்ள எல்லாக் கிராமங்களையும் கண்டு இருக்கிறேன். இந்தியா ஒரே தேசம்தான் ஒரே சக்திதான்.”
”நேற்று, இன்று, நாளை, முக்காத்தையும் சரித்திரத்தையும், நாம் உணர வேண்டும். நாம் மட்டும் வளர்ந்தால் போதாது. வாலிப வயதினருக்கும் உணர்த்த வேண்டும்.
இது ஜனநாயக நாடு. இங்கே எஜமானர்கள் யார்? வாக்காளப் பெருமக்கள்தான் அவர்கள் தான் உண்மையான எஜமானர்கள்.”
கல்வி நாட்டிற்கு அவசியம் தேவை. ஆனால், கற்றவர், கல்லாதவர் என்று ஒரு புது சாதி உண்டாகிவிடக்கூடாது.”
”தண்ணீர் கீழ்நோக்கி ஓடுகிறது. திடீரென்று அது நின்று விட்டால் தேக்கம் ஏற்படுகிறது. அதைப் பகிர்ந்து கொடுக்கவேண்டும். அதேபோல் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பெருகும் காலத்தில் அந்த வளர்ச்சி ஒரு குறிப்பிட்ட இடத்தில் தேங்கி விடாமல் பிரித்து தர வேண்டும். அப்படிச் செய்யும் போது கோப்ப்படுவதற்கு என்ன இருக்கிறது?”
”சமதர்மத்தில் என்ன கெடுதல் இருக்கிறது? பட்டினியாக இருப்பவர்கள் எத்தரை நாளைக்கு இப்படியே இருப்பது? ஒரு சிலர் செலவத்திலும் இருக்கலாமா? இந்த வேறுபாடு போய் எல்லோரும் சம்மாக இருக்க வேண்டும் என்பது தான் சமதரம்ம் அதில் என்ன தப்பு?”
”உங்களைக் ‘கேடிலாக்’ காரில் போக வேண்தாமென்று சொல்லவில்லை. ஆனால், போக்குவரத்து நெரிசலின் போது, நாலு தெருச் சந்திப்பில் வெறும் நூறு ரூபாய் சம்பளம் வாங்கும் டிராபிக் கான்ஸ்டபிள் நிறுத்த என்று கேட்கிறீர்களே! அவன் நிறுத்தி வழியமைக்கக் குடுக்கலேன்னா, நீங்களும் உங்க காரும் நொறுங்கிப் போயிடுமேன்னேன். அதே போலத் தான் சமூகத்திலும் சில கட்டுப்பாடுகள் தேவைன்னு நாங்க சொல்கிறோம்”
ரூபாய்க்கு மூணு படி அரிசி போடுவோம்னு சில படிச்ச தலைவர்களே பேசறாங்க. அது முடியுமான்னு நானும் பல பொருளாதார நிபுணர்களைக் கேட்டேன். அவர்கள் அது சாத்தியமே இல்லேங்குறாங்க. பாமர ஜனங்களின் ஓட்டுக்களை விக்குறத்துக்குப் படிச்சவங்க இப்படிப் பொய் சொல்லலாமா?
” வசதியாக வீடு கட்டிக் கொள்கிறவர்கள், தங்கள் வீட்டு வேலைக்கார்களுக்கும் வீடுகள் கட்டிக் கொடுக்க வேண்டும் என்று சட்டம் போடவேண்டும். இல்லா விட்டால் குடிசைப் பிரச்சனை தீராது.”
”கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, இது நமது நாடு. நாம் எல்லோரும் இந்தியர்கள என்ற உணர்ச்சி வேண்டும். தமிழன் என்று சொல்வதில் பெருமை கொள்ளலாம். ஆனால் இந்தியன் என்றால் இன்னும் அதிகமான பெருமை கொள்ள வேண்டும். இந்தியா வாழ்ந்தால் தான் தமிழ் நாடும் வாழும்.”
பதவி என்பது யாருக்கும் சொந்தமானதல்ல. அது என்ன தனி உடைமையா? கிடையவே கிடையாது. மந்திரி பதவி பரம்பரைப் பாத்தியதை அல்ல. மகாராஜாக்கள் பதவி போன்றதும் அல்ல. மக்கள் ஒத்துழைக்கும் வரை மட்டுமே பதவி நீடிக்கும்.”
”நாட்டில் உள்ள பஞ்சம், பசி, பட்டினி, பிணி, வேலையின்மை ஆகியவற்றைப் போக்குவதி ஒரு கட்சிக்கு மட்டும் சொந்தமான வேலை அல்ல. அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, மக்களுடைய பிரச்சினை தேசியப் பிரச்சினை ஆகும்.”
”கடவுளுக்கு தேங்காய் உடைத்துப் பூமாலை சாத்தி பூஜை செயதால் மட்டும் போதும். அவர்கள் சும்மா இருந்து விடுவார். நாம நினைத்ததைச் செய்து கொண்டே போகலாம் என்று எண்ணக் கூடாது.”
”கோடி ரூபாய் வைத்திருப்பவனைக் கோடீஸ்வரன் என்கிறோம். பணமு படைத்தவன் என்பதற்காக ஒருவனை ஈஸ்வரனாக்கி கடவுளாக்கி விடும் இந்நப் புத்தி சமுதாயத்துக்கு எப்படி நன்மை தரும்?”
”நாணயக் குறைவால் தொழில்கள் கெடும். தாங்கள் காட்டும் மாதிரிப் பொருளகளையும் போலவே சரக்கை அனுப்ப வேண்டும். மாதிரி நன்றாகவும், சரக்கு மோசமாகவும் இருக்கக்கூடாது. இதுவே வணிகர்களுக்கு நான் கூறும் அறிவுரை.”
வயோதிக காலத்தில் வேலை செய்ய இயலாமல் போய்விடும். நம கதி என்ன ஆகும் என்ற பயம் முதியவரிகளுக்கு உண்டாகிறது. அவர்களுடைய இந்த அச்சத்தை நாம் போக்க வேண்டும்.”
”மந்திரியாக இருப்பது மாலை வாங்கிக் கொண்டு சுற்றுவதற்கல்ல. நம்மை நம்பி ஆட்சியை ஒப்படைத்த மக்கள் அனைவருக்கும் சேவை செய்வதற்காகத்தான்.”
இவ்வளவு செய்தும் குழந்தைகள் போல இவனும் அப்பபடியே இருக்க வேண்டுமானால் அரசாங்கம் எதற்கு? மந்திரிகள் எதற்கு? பலம் படைத்தவர்கள் அதிகாரம் தானே இருக்க வேண்டும்?”
”பணம் பாதாளம் வரைக்கும் பாயும் என்று சொன்னாங்க். அப்போதைக்கெல்லாம் நான் நம்பலே. ஆனால், இப்பத் தான் தெரியுது. பணம், பாதாளமென்ன. அதுக்குக் கீழே வரைக்கும் கூட பாயுமின்னு.”
”ஏதோ சில கட்சிகள் கூடிக் கூட்டாளி அமைத்துத் தேர்தலில் வெற்றி பெற்றால் நிலையான அரசாங்கம் எப்படி அமையும்? சர்க்கசில் சிங்கம், புலி, கரடி, குரங்கு, நரி ஆகியவை கூண்டில் அடைபட்டு அடங்குவது போல, ஒன்றுக்கு ஒன்று முரண்பட்ட கொள்கைகளை உடைய கட்சிகளது கதம்ப சர்க்கார் தானே நடக்கும்? நாட்டில்அமைதியும் ஒழுங்கும் இருக்குமா? அவர்களது பிரச்சினையைக் கவனிக்க முடியுமா? பொது மக்கள் யோசிக்கவேண்டும்.”
”நாமெல்லோரும் பெரியவர்காகி விட்டோம். நமக்குப் படிப்பு வராது. நம்முடைய குழந்தைகளாவது படிக்கட்டும். அவர்களுக்காவது எது நியாயம், எது அநியாயம் என்று தெரியட்டும். அதற்காகத் தான் நாங்கள் நிறையப் பள்ளிக் கூடங்களைத் திறக்கிறோம். எல்லோரும் படிக்க வசதி செய்து கொண்டு இருக்கிறோம்.
”ஏழைகள் கையில் பணப புழுக்கம் நன்றாக இருந்தால் தான் நாடு நல்ல படியாக இருக்க முடியும். புதிய தொழிற்சாலைகளைக் கட்ட முடியும். ஏழைகள் நிறைய காப்பி, டீ சாப்பிடுவதால் சர்க்கரை மிகுதியாகத் தேவைப்படுகிறது. உடனே சர்க்கரை ஆலை வைக்கிறோம். ஆக ஏழை கையில் பணமிருந்தால் தான் வாழ்க்கை தரம் உயரும். தொழில்கள் வளரும்.”
”இந்தக் கிராமத்திலே ஏன் பள்ளிக்கூடம் திறக்கப்படவில்லை?” – காமராஜர்.
”இந்தக் கட்சிக்கார்ர்கள் நம் கட்சிக்கு ஓட்டுப் போடவில்லை. அதனால் தான் பள்ளிக் கூடம் திறக்கப்படவில்லை” என்றார் முதலமைச்சரின் உதவியாளர்.
”இது ஜனநாயக நாடு . மக்கள் தங்கள் விருப்பப்படி யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டுப் போடலாம்.
அது அவர்களின் ஜனநாயக உரிமை. அதனால் அரசாங்கம் எல்லோருக்கும் பொதுவானது. உடனே இந்தக் கிராமத்துக்கு பள்ளிக் கூடம் திறக்கச் செய்யுங்கள்” – என்றார் காமராஜர்.
ஒரு கிராமத்துக்குச் சென்றார் முதலமைச்சர் காமராஜர். அந்த ஊர்த் தலைவர்கள் அவரிடம் வந்து,
”ஐயா! எங்களுக்குச் சுடுகாட்டுக்குச் செல்வதற்குப் பாதை அமைத்துத் தந்திட வேண்டும்” – என்றார்கள்.
காமராஜர் இதைக் கேட்டுச் சிரித்துக் கொண்டே,
” நான் நீங்களெல்லாம் நன்றாக வாழ்வதற்குப் பாதை தேடுகிறேன். நீங்கள் செத்தவனுக்குப் பாதை கேட்கிறீர்கள்!” என்றார்.
காமராசர் மேடையில் இருக்கும் போதே ஒரு பேச்சாளர்,
”காங்கிரஸ் ஆட்சிக்கு வருமானால், உழுபவனுக்கு நிலம் சொந்தமாகும்” என்று பேசினார்.
அடுத்துப் பேசிய காமராஜர்,
” நடக்கிறதைச் சொல்லணும். நாங்கள் நம்புகிறதைச் சொல்லணும். உழுபவனுக்கு நிலம் சொந்தமாகனுமின்னு சொல்லுறீங்க. சரி… காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும், அப்படியே தந்து விடுவதா வச்சுக்குவோம்.
அப்புறம் நெல் அறுக்கிறவன், அறுக்கிறவங்களுக்கே நெல் சொந்தம் என்பான். அதை அரைக்கிறவன், அரைக்கிறவனுக்கே அரிசி சொந்தமின்னு சொல்லுவான்” – என்றார்.
‘உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்று பேசியவரும், ஏன் கேட்டுக் கொண்டு இருந்த பொது மக்களும் அசந்து போனார்கள். இது கூடக் காமராஜரின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பேச்சுத்தான்.
1971 – ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் இந்திரா காங்கிஸ் அமோக வெற்றி பெற்றது. காமராஜர் சார்ந்திருந்த பழைய காங்கிரஸ் படுதோல்வி அடைந்திருந்தது.
தொண்டர்கள் காமராஜரிடம் வந்து,
”ஜயா! அவர்கள் வெற்றிக்கு காரணம் ”ரஷ்ய மை” வைத்து ஏமாற்றி விட்டார்கள். வாக்குச் சீட்டில் ரஷ்ய மை தடவிவிட்டார்கள்” என்று கூறினார்கள்.
இதைக் கேட்ட காமராஜர்,
”ஜனநாயகத்திலே நம்பிக்கை உள்ளவர்களின் பேச்சா இது. நாம் தேர்தலிலே தோற்றதிற்குக் காரணம் ‘மை’ என்கிறீர்களே! அதுவா உண்மை? இல்லை. நம்மை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதுதான் உண்மை” – என்றார்.
முதலமைச்சர் ஆனதும் காமராஜர் பேசிய பேச்சில் ,
” நான் ஏழைகளின் துயர் நீக்கவே முதலமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டுள்ளேன். அதற்கு இடமில்லை என்றால் எனக்கு இப்பதவி தேவை இல்லை.” என்றார்.
ஏழையாகப் பிறந்து, எளிமையாக வாழ்ந்து, எந்தச் சூழ்நிலையிலும் ஏழைகளின் துயரங்களை நீக்கவே எண்ணிப் பாடுபட்ட காமராஜரை ”ஏழைப் பங்காளன்” என்று சொல்வதிலே தவறில்லை தானே.
அப்போது காமராஜர் பதவியில் இல்லை. நாகர்கோயில் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக மட்டும் இருந்தார். தி.மு.க. ஆட்சி தமிழகத்தில் நடந்து கொண்டு இருந்தது.
அமெரிக்க அதிபர் நிக்ஸன் இந்தியாவுக்குச் சுற்றுப் பயணம் வந்திருந்தார். அவர் பெருந்தலைவர் காமராஜரைச் சந்திக்க விரும்பினார். புது டெல்லியிலிருந்து தேதி மற்றும் நேரம் கேட்டுத் தகவல் வந்திருந்தது. இதைக் காமராஜரிடம் கூறினார்கள்.
”பார்க்க முடியாதுன்னேன்” – என்று காமராஜர் பதில் சொல்லி விட்டார். ஏன் இப்படிச் சொல்கிறார்? வந்து பார்க்க விரும்புவதோ அமெரிக்க அதிபர். குழப்ப மடைந்தார்கள் கூடியிருந்தவர்கள்.
அவர்களைப் பார்த்துக் காமராஜர் சொன்னார். அண்ணாத்துரை அமெரிக்கா சென்றிருந்தார். அப்போது அவர்அமெரிக்கா அதிபர் நிக்ஸனைச் சந்திக்க விரும்பினார். பார்க்க மறுத்திவிட்டாராம் நிக்ஸன். அப்படிப்பட்டவரை நான் ஏன் பார்க்க வேண்டும்” என்றார் காமராஜர்.
இது காமராஜர், தானும் ஒரு தமிழன் என்று தன்மானத்தையும், மாற்றுக் கட்சிக்காரர் என்றாலும் அண்ணாத்துரைக்கு அமெரிக்க அதிபர் சந்திக்கச் சந்தர்ப்பம் கொடுக்காததற்குக் கண்டனமும் தெரிவித்ததையும் தானே காட்டுகிறது. அவர் சுருக்கமாகப் பேசினாலும் சுறுக்கென்று பேசி இருக்கிறார்.
பெருந்தலைவர் காமராஜர் அவர்களது பேச்சுக்கள் பலவற்றைத் தொகுத்துப் பார்த்தோம். அவரது பேச்சுக்களில் நகைச்சுவையும் உள்ளார்ந்த நற்கருத்துகளும், பொதுவான போதனைகள் போன்ற தத்துவங்களும் இருந்ததனைக் கண்டோம்.
”ஆகட்டும் பார்க்கலாமின்னேன்” – என்று சொல்வதைத் தவிரக் காமராஜருக்கு வேறொன்றும் பேசவே தெரியாது என்று அவரைத் தாழ்த்திப் பேசியவர்கள் கூடக் காமராஜரத் பேச்சுக்களை கேட்டிருந்தால் நிச்சயமாக வாழ்த்திப் பேசியிருப்பார்கள்.
காங்கிரஸ் ஊழியர்கள் மத்தியிலே தொண்டனாக, பின்னர் தலைவனாக அவரது பேச்சு ஒரு விதமாக இருந்தது. முதலமைச்சர் ஆன பின்பு காமராஜர் பேச்சு வேறு விதமாக மாறியிருந்தது. அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த போது, இந்திய முழுவதக்கும் ஏற்றதாக அவரது பேச்சுக்கள் இருந்தன.
கோவைக் கல்லூரிகளின் சமூகப் பணிக் கூட்டு மன்ற அமைப்புத் துவக்க விழிவிலே, கல்லூரி, மாணவ – மாணவியர்களிடையே அமைப்பைத் தொடங்கி வைத்து, ” எது சமூக சேவை?” என்று காமராஜர் மணிக்கணக்கில் பேரூரை ஆற்றிப் பாராட்டுதல்களைப் பெற்றிருக்கிறார் என்பது பல பேருக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் சரித்திரம் சான்று பகர்கிறதே. எனவே காமராஜர் படைத்தவர் தான் என்பதை யாரும் மறுக்கவே முடியாது.

அரசியல் சாதனைகள்

அரசியல் சாதனைகள்

காமராஜர் பண்டித நேருவுடனும், மற்ற தலைவர்ளுடனும் காங்கிரசைப் பலப்படுத்தக் கலந்து ஆலோசித்தார். தானே ஒரு திட்டத்தை உருவாக்கினார். கடைசியாக அந்தத் திட்டத்தை அவர் வெளியிட்டார். மூத்த தலைவர்கள் பதவியிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சிப் பணிகளில் ஈடுபடவேண்டும். இந்தியா முழுதும் காங்கிரஸ் இயக்கத்தை வலிமை உடையதாக ஆக்க வேண்டும் என்பதே காமராஜரின் திட்டம். இதைக் கே.பிளான் (காமராஜர் திட்டம்) என்றார்கள்.
காமராஜரின் இந்தத் திட்டத்தைப் பிரதமர் நேருஜியும், மற்றத் தலைவர்களும் ஏற்றுக்கொண்டார்கள். முன் உதாரணமாக முதலமைச்சராக இருந்த காமராஜரே பதவியிலிருந்து விலகினார். தனது அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த பெரியவர். கே. பக்தவத்சலத்தைத் தமிழ் நாட்டின் முதலமைச்சராக்கினார்.
இந்தியாவெங்கும் காமராஜர் திட்டம் காரணமாகப் பல மூத்த தலைவர்கள் பதவியை விட்டு விலகிக் கட்சிப் பணிகளில் ஈடுபட்டார்கள். பாரதப் பிரதமர் பண்டித நேருவே, தானும் காமராஜ் திட்டப்படி பதவி விலகி கட்சிப் பணியாற்ற முன் வந்து தனது விருப்பத்தைத் தெரிவித்தார். நேருஜியை விட்டால் இந்தியப் பிரதமராக இருந்து நல்லாட்சி புரிய வேறு தலைவர் இல்லை என்பது எல்லாத் தலைவர்களும் கூறி, நேருவைப் பிரதமராக நீடிக்கச் செய்தார்கள்.
1963 – இல் அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டிக் கூட்டம் நடந்தது. அதில் காமராஜரைத் தலைவராகத் தேர்ந்தெடுத்தார்கள். ஏற்கனவே காமராஜர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிச் செயலாளராகவும், பின்னர் அவர் தமிழ்நாட்டு முதலமைச்சர் பதவியை ஏற்கும் வரை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவரா இருந்திருக்கிறார். தொடர்ந்து அவர் 12 ஆண்டு காலம் தலைவராக இருந்தார்.
அகிள இந்திய அளவில் எல்லாத் தலைவர்களுடனும் காமராஜர் நட்பும், தொடர்பும் கொண்டவர். அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இப்போது அவர் பொறுப்பேற்று உயர்ந்தார். தலைவர் காமராஜர், பெருந்தலைவர் காமராஜர் ஆனார்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை காமராஜர் ஆட்சி பொற்காளமாகத் திகழ்ந்தது. அவருக்குப் பின் அந்தப் பொற்காலம் மறுபடியும் ஏற்படவேயில்லை.
அடுத்து நடந்த பொதுத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியடைந்தது. எதிர்க்கட்சியாக இருந்த திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ்நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றியது. அறிஞர் அண்ணா முதலமைச்சர் ஆனார். ஆளுங்கட்சியாக இருந்த காங்கிரஸ் தமிழகத்தில் எதிர்க்கட்சியாக ஆனது. இது அரசியலில் சகஜம்தான். ஆனாலும், மத்தியிலே காங்கிரஸ்தான் தொடர்ந்து ஆட்சி செய்து வந்தது. பலம் சற்று குறைந்திருந்தாலும் பாரதப் பிரதமர், பண்டித ஜவஹர்லாலை கீழே இறக்க இந்திய மக்கள் விரும்பவில்லை.
அகில இந்தியத் தலைவரான பின் காமராஜர் தனது இருப்பிடத்தை புதுடில்லிக்கு மாற்றிக்கொண்டார். அவருக்கு ஒரு வீடு ஒதுக்கித் தந்திருந்தார்கள். ஆனாலும் காமராஜர், தொடர்ந்து குடியிருந்து வந்த சென்னை, தி.நகர், திருமலைப்பிள்ளை வீட்டைக் காலி செய்யவில்லை.
டெல்லியில் இருந்து கொண்டு காமராஜர், அகில இந்திய அளவில், காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்தவும், அவ்வப்போது எழும் பிரச்சினைகளைக் கவனித்துக் களைந்து எறியவும், இந்தியா முழுவதும் பயணம் செய்தார். பகலிரவு என்று பாராமல் அவர் பாடுபட்டு வந்தார்.
ஆட்சியில் இருந்து கொண்டு பண்டிதநேரு அவர்கள் இந்திய தேசத்தை முன்னேற்றப்பாதையில் அழைத்துகச்சென்று கொண்டு இருந்தார். நாடு தான் முக்கியம். நாட்டு மக்களின் நலன்களே பிரதானம் என்ற அடிப்படையில் அவர் ஐந்தாண்டுத் திட்டங்களை வகுத்து நிறைவேற்றி வந்தார். நேருஜி அவர்கள் நாட்டுப் பணியிலேயே தனது இறுதிக்காலம் வரை அக்கறை கொண்டு அயராது உழைத்தார்.
சுதந்திரம் அடைந்த பின்னர் சுமார் பதினேழு ஆண்டுகாலம் அவர் பாரதப் பிரதமராக இருந்து, தன்னிகரற்ற தலைவராக விளங்கினார். வயது முதிர்ந்த காரணத்தாலும், கடின உழைப்பாலும் அவர் அடிக்கடி களைப்படைந்தார். சில சமயங்களில் நோய்வாய்ப்பட்டார்.
இமயமலைக்கு மேரு போல், இந்திய நாட்டுக்கு நேரு விளங்கினார். ஒரு காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்றார். உடல்நலம் பாதிக்கப்பட்டது திரும்பிவிட்டார் என்றாலும் நேருஜி தனது அன்றாட அலுவல்களை எப்போதும் போலக் கவனித்தார். வழக்கம் போல இரவு ஒரு மணி வரை கண் விழித்திருந்து வந்திருந்த கடிதங்களுக்கு எல்லாம் பதில் போடுவார்.
1964 – ஆம் ஆண்டு, மே மாதம், 27 ஆம் நாள் பண்டித ஜவஹர்லால் நேரு அமரரானார். இந்திய நாடே துயரக் கடலில் ஆழ்ந்தது. உலகமே சோகத்தில் மூழ்கியது. உலகத் தலைவர்கள் எல்லாம் ஒரு சேர வருந்தினார்கள். நேருஜியுடன், கூடவே இருந்து வந்த அவரது புதல்வி இந்திரா காந்தியோ அழுது புலம்பிக் கண்ணீர் வடித்தார்.
காமரஜரும் கதிகலங்கிப் போனார். காமராஜர்மீது நேருஜி மதிப்பும், மரியாதையும், பேரன்பும், கொண்டிருந்தார். அதேபோலக் காமராஜரும், பண்டித நேருவிடம் ஒப்பிலா மரியாதையும், உயர்வான கருத்தும் கொண்டிருந்தார்.
உலகத்தில உள்ள எந்த நாடும் பண்டித நேருவைத் தெரிந்து வைத்திருந்தது. உலகத் தலைவர்கள் நேருஜியைப் பெரிதும் மதித்தார்கள். மரியாதை செலுத்தினார்கள். அவர் ஆசிய ஜோதி மட்டுமல்ல, அகில உலகத்தின் சமாதானத் தூதுவராயிருந்தார்.
நேருஜி எதிர்பாராத விதமாக, அகால மரணம் அடைந்திருந்ததால் அடுத்து என்ன செய்வது? யாரைப் பிரதமராக்குவது என்ற கேள்வி எங்கும் எழுந்தது. குறிப்பாக அகல இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த, பெருந்தலைவர் காமராஜுக்கே இதற்கான முடிவினை எடுக்கும் உரிமையும் இருந்தது.
இந்திய அரசியல் சட்ட விதிகளின்படி பிரதமர் இடம் காலியாக இருக்க்க்கூடாது. அதனால் தற்கலிகப் பிரதமராக அதுவரை பண்டித நேருவின் அமைச்சரவையில், மூத்த அமைச்சராகப் பணிபுரிந்து வந்த குல்ஜாரிலால் ந்ந்தா அவர்களைத் தற்காலிகப் பிரதமராக ஆக்கினார்கள்.
பாராளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர்களைக் கலந்தாலோசித்து, அவர்களின் ஏகோபித்த ஒப்புதலோடு ஒரு தலைவரைத் தேர்ந்து எடுக்க வேண்டும். அந்தத் தலைவரே பிரதமராகப் பொறுப்பு ஏற்பார்.
இந்தக் காரியங்களைச் செய்ய வேண்டியவர், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவரே ஆவார். இப்போது அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டித் தலைவராக்க் காமராஜர் இருப்பதால், அவருக்கே நேருஜியின் மறைவுக்குப் பிறகு ஒரு நிரந்தரப் பிரதமரைத் தேர்ந்தெடுத்து ஆட்சியில் அமர்த்தும் பொறுப்பு பெருந்தலைவர் காமராஜருக்கு ஏற்பட்டது.
நேருவுக்கு பின்னர் யார் என்ற பிரச்சினை அவர் வாழ்ந்த காலத்திலேயே எழுந்தது. அப்போது எல்லாம் பண்டித நேருவிடம் கேட்டதற்கு அவர் சொன்னார்.
”இது ஒரு ஜனநாயக நாடு. ஜனநாயக முறையிலே பிரதமர் தேர்ந்து எடுக்கப்படவேண்டும்.” என்று பதில் கூறினார் நேருஜி. இந்தியப் பிரதமர் பதவி, அந்தப் பதவி வகிப்பவரின் பொறுப்பு மகத்தானது. உலகிலுள்ள எல்லா நாடுகளும், ஏற்றுப் போற்றப்படக்கூடியவராக புகழப் படக்கூடியவராக அவர் இருக்க வேண்டும்.
போட்டியின்றித் தேர்ந்து எடுத்தால்தான் சிறப்பாக இருக்கும். ஆனால் போட்டி இப்போது இல்லாமல் இருக்காது. பதவி ஆசை உள்ளவர்கள் கட்டாயம் போட்டி போடத் தயாராக இருப்பார்கள். இவர்களை எல்லாம் சந்தித்து கலந்து பேசி, சமாதானப்படுத்தி, போட்டி போடாமல் இருக்கச் செய்து, ஏகமனதாக ஒரு பிரதமரை தேர்ந்தெடுக்கும் பொற்ப்பு பெருந்தலைவர் காமராஜருக்கு இருந்தது.
ஒரு சிலர் தற்காலிகமாகப் பிரதமராக இருக்கும் குஜ்ஜாரிலால் ந்ந்தாவே தொடரந்து இருக்கலாம் என்றார்கள். வேறு சிலர் மொரார்ஜிதேசாயைப் பிரதமாராக்க ஆசைப்பட்டனர்.
நாடு இருக்கும் நிலைமையில், நாட்டைக் கட்டிக் காத்து, அதைப் பண்டிதஜவஹர்கலால் நேருவைப்போல முன்னேற்றப்பாதையில் அழைத்துச் செல்லத் தகுந்த நபர் ஒருவரைத் தேர்ந்தெடுக்க காமராஜர் பெரிதும் விரும்பினார். பல ஆலோசனைக்குப் பின்னர் பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான பிரச்சினை ஒரு முடிவுக்கு வந்தது.
பண்டித நேருவின் அமைச்சரவையில் இரயில்வே அமைச்சராக இருந்து, அரியலூர் இரயில் விபத்துக்கு தார்மீக பொறுப்பு ஏற்றுத் தனது பதவியை ராஜினாமா செய்தவர் லால்பகதூர் சாஸ்திரி. பின்னர் பண்டித நேருவின் வேண்டுகோளுக்கிணங்க அவர் மீண்டும் அமைச்சராகப் பதவி ஏற்றார்.
பெருந்தலைவர் காமராஜரின் பிளான்படி லால்பகதூர் சாஸ்திரி தனது அமைச்சர் பதவியை உதறித் தள்ளினார். கட்சிப் பணிக்காக வந்தார். கடைசியாக லால்பகதூர் சாஸ்திரி, பண்டித நேருவுக்கு வலக்கரம் போல அவரது அமைச்சரவையில், இலாக்கா இல்லாத மந்திரியாக இருந்தார்.
பழம்பெரும் தியாகியும், எளிமையான வாழ்க்கை மேற்கொண்டவருமான லால்பகதூர் சாஸ்திரியை பிரதமர் பதவிக்குக் காமராஜர் தேர்ந்து எடுக்கச் செய்தார்.
காமராஜரின் இந்தச் செயலை அகில இந்தியத் தலைவர்கள் அனைவரும் ஆதரித்தனர். லால்பகதூர் சாஸ்திரியே தற்போது நாடு இருக்கும் நிலையில் பிரதமர் பதவிக்குத் தகுதியானவர் என்பதை ஒப்புக்கொண்டு பெருந்தலைவர் காமராஜரைப் பாராட்டினார்கள்.
இந்தியாவின் இரண்டாவது பிரதமராக லால்பகதூர் சாஸ்திரி பதவி ஏற்றவுடன், பாகிஸ்தான் இந்தியா மீது படை எடுத்தது. நாட்டிலே உணவு தானியப் பற்றாக்குறை இருந்தது. போதாக்குறைக்கு இப்போது போரும் மூண்டுவிட்டது. இவை எல்லாம் லால்பகதூர் சாஸ்திரியின் மனதைக் கலக்கியது. பகைவர்களை எதிர்த்துப் போரிடவும் வேண்டும். அதேசமயம் நாட்டில் பற்றாக்குறையான் உணவு தானிய உற்பத்தியையும் பெருக்கியாக வேண்டும்.
இந்த இரண்டையும் சேர்த்து லால்பகதூர் சாஸ்திரி ஒரு புதிய கோஷத்தை உருவாக்கினார். அக் கோஷமே, ”ஜெய்கிசான், ஜெய்சவான்” என்பதாகும். இந்தக் கோஷம் இந்திய தேசம் முழுதும் எதிரொலித்தது. எதிரியை விரட்டப் படைவீர்ர்கள் உயிரையும் பணயம் வைத்துப் போராடும் போது விவசாயிகள் தானிய உற்பத்தியை பெருக்க அரும்பாடுபட்டனர்.
கடைசியாகப் படை எடுத்த பாகிஸ்தான் படை, இந்திய ராணுவம் கொடுத்த பதிலடியை தாங்காமல், சமாதானத்துக்கு வந்தது. சமாதான உடன்படிக்கையில் கையெழுத்திட பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி ரஷ்யா சென்றார்.
1966 – ஆம் ஆண்டு, ஜனவரி மாதம், 10 – ஆம் தேதி இரவு ரஷ்யத் தலைவர்கள் முன்னிலையில் சமாதான உடன்படிக்கை கையெழுத்தாயிற்று.
பிரதமர லால்பகதூர் சாஸ்திரி மன நிம்மதியுடன் தனது தங்கும் இடத்துக்குச் சென்றார். அவரைத் தொடர்ந்து அங்கே காலனும் சென்றான் போலும். சாஸ்திரி இயற்கை எய்தினார். பிரதமராக ரஷ்யா சென்ற லால்பகதூர் சாஸ்திரியைப் பிணமாகத்தான் இந்தியாவிற்குக் கொண்டுவர வேண்டியதாயிற்று.
முதலில் பிரதமர் நேரு மறைந்தார். அடுத்துப் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி மறைந்தார். இந்தியாவில் மீண்டும் இருள் சூழ்ந்தது. குல்ஜாரிலால் ந்ந்தாவைத் தற்காலிக பிரதமராக்கினார்கள். இம்முறை பிரதமரைத் தேர்ந்து எடுப்பது என்பது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. என்ன செய்யப் போகிறார் காமராஜர்?
இதற்கிடையில் அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டித் தலைவராகிய காமராஜருக்குப் பிரதமரைத் தேர்ந்தெடுப்பது கடினமாக இருந்தது. தேர்ந்து எட்க்கப்படும் பிரதமர் மக்கள் யாவரும் ஏற்றுக் கொள்ளக் கூடியவராகவும், இந்திய நாட்டைக் கட்டிக்காத்து, முன்னேற்றப்பாதையில் இட்டுச் செல்பவராகவும் இருக்கவேண்டும்.
யார் இதற்குத் தகுதியானவர் என்ற கேள்வி எழும்போதே, கட்சியிலும் பிரதமருக்கான் வரை முறைப்படி தேர்தல் மூலமே தேர்ந்து எடுக்க வேண்டும் என்ற பிடிவாதப் போக்கும் நிலவியது.
கட்சித் தலைவர்கள் விரும்பியபடியே பிரதமரைத் தேர்தல் மூலமு தேர்ந்து எடுக்கக் காமராஜர் தீர்மானித்தார். பண்டிதநேருவின் ஒரு மகளும் சாஸ்திரி மந்திரி சபையில் செய்தி ஒலிபரப்பு மந்திரியாகவும் இருந்தவருமான இந்திராகாந்தியை காமாராஜர் பிரதமர் தேர்தலுக்கு நிறுத்தினார்.
இந்திரா காந்தியை எதிர்த்துப் பழம்பெரும் தேசபக்தரும் , தியாகியுமான மொரார்ஜிதேசாய் போட்டி போட்டார்.
தேசாய் ஒரு சிறந்த தேசபக்தர். பம்பாய் மாநில முதல்வராகவும், பிறகு நேரஜியின் அமைச்சரவையில் ஒரு அமைச்சராகவும் பதவி வகித்தவர். சிறந்த நிர்வாகி. மிகவும் கண்டிப்புக்கார்ர். ஓரளவிற்கு மொரார்ஜி தேசாய்க்கு ஆதரவும் இருந்தது. அவரைப் பிரதமராக்க பல தலைவர்கள் விரும்பினார்கள்.
ஆனால் காமராஜரோ ‘கிங்மேக்கர்’ என்ற பெயர் பெற்றவர். அதாவது ‘பிரதமர்களைத் தேர்வு செய்பவர்’ என்று பெயர் எடுத்து இருந்தார். அவர் நினைத்து விரும்பியபடியே தான் லால்பகதூர் சாஸ்திரியைப் பிரதமராக்கினார்.
இப்போது காமராஜர் தியாக் குடும்பத்தில் பிறந்தவரும் பண்டித நேருவினால் அரசியலுக்கு தயாரிக்கப்பட்டவரும் அவரோடு கூடவே இருந்தவரும் மத்திய அமைச்சராக இருந்து முன் அனுபவம் பெற்றவருமான இந்திராகாந்தியைப் பிரதமராக்க விரும்பினார்.
இந்திராகாந்தி பிரதமரானால் இந்தியா சுபிட்சமடையும். ஏழை, எளிய மக்கள் வாழ்வு வளம் பெறும். முன்னேற்றமடையும் என்று காமராஜர் நம்பிக்கை கொண்டிருந்தார். அந்த நம்பிக்கை வீண்போக விடவில்லை.
தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பில் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரடனும் பேசி, காமராஜர், இந்திரா காந்திக்கு ஆதரவு திரட்டினார்.
காமராஜர்தான் ‘கிங்மேக்கர்’ ஆயிற்றே. அவரது விருப்பப்படியே கட்சித் தேர்தலில் இந்திரா வெற்றி பெற்றார். இந்தியாவின் மூன்றாவது பிரதமராக அவர் பதவி ஏற்றுக்கொண்டார்.
தனது முயற்சி வெற்றி பெற்று, இந்திராகாந்தி பிரதமராக ஆனது கண்டு, காமராஜர் பெரிதும் மனம் மகிழ்ந்தார். இந்திய அரசியலில் தான் ஒரு கிங்மேக்கர்தான் என்பதைக் காமராஜர் நிரூபித்தும் காட்டிவிட்டார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக, அகில இந்தியக் காங்கிரஸ் செயற்குழு உறுப்பினராக, பின்னர் தமிழ்நாடு முதலமைச்சராக இறுதியாக, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவராக்க் காமராஜர் பிரதமர் நேரஜியுடன் நீண்ட நெடுங்காலத் தொடர்பு வைத்திருந்தார். தேசப்பிதா மகாத்மா காந்திக்குப் பின் காமராஜர், மதிப்பளித்ததும், நேசித்ததும் நேருஜி ஒருவரைத்தான். அந்த அரும்பெரும் தலைவர் நேருஜியின் மகள் இந்திராகாந்தியைப் பிரதமராக்கியதைக் காமராஜர், தனது நன்றிக்கடனாகவே கருதினார். ஆனால் தோற்றுப்போன மொரார்ஜி தேசாய், காமராஜரை அல்ல இந்திராகாந்தியைப் பழிவாங்கக் காலம் வரும் என்று காத்துக்கிடந்தார்.
‘வளர்த்தக் கடா மார்பில் பாய்ந்தது’ என்ற பழமொழிக்கு ஒப்பப்பிற்காலத்தில் காமராஜருக்கு ஏற்பட்ட நிகழ்ச்சிகளும் உண்டு. அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டித் தலைவராக்க் காமராஜர் டெல்லியில் இரண்டரை வருடகாலம் இருந்நார். காங்கரஸ் கட்சியைப் பலப்படுத்த அவர் இந்தியாவில் இருந்த எல்லா மாநிலங்களுக்கும் பயணம் செய்து பிரச்சாரம் செய்தார்.
அவரது பிரச்சாரங்கள் தமிழ்மொழியிலேதான் இருந்தது. மொழி தெரியாவிட்டாலும். வடநாட்டு மக்கள் காமராஜர் பேச்சைக்கேட்டார்கள். அவரைக் ”காலாகாந்தி” (கருப்புக்காந்தி) என்றே அழைத்தார்கள். காமராஜரது எளிமையும், உழைப்பையும், நேர்மையையும் எல்லா மக்களும் மதித்து அவரைப் போற்றினார்கள் – புகழ்ந்தார்கள்.
வடமாநிலத்தில் ஒரு காங்கிரஸ் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்திற்கு காமராஜர் பேசுவதற்குச் சென்றிருந்தார். அவர் கூடவே சி. சுப்பிரமணியமும் சென்றிருந்தார்.
இந்தி மொழி பேசும் மக்கள் கூட்டமே எதிரில் உட்கார்ந்து இருந்தார்கள். சி. சுப்பிரமணியம் தனது உரையை ஆங்கிலத்தில் நிகழ்த்தினார். இதைக் கேட்ட மக்கள் கூச்சல் போட்டு, அவரைப் பேசவிடாமல் தடுத்தார்கள். ஹிந்தியில் பேசுமாறு கூச்சல் போட்டார்கள். சி. சுப்பிரமணியம் தனது பேச்சை நிறுத்திக் கொண்டு உட்கார்ந்துவிட்டார்.
இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த பெருந்தலைவர் காமராஜர், சற்று திகைத்தார். ஏனெனில் அடுத்து அவர் அதே கூட்டத்தில் தமிழில் தானே பேசப் போகிறார்.
காமராஜர் ஒருவரை அழைத்துக் கூட்டத்தில் உள்ள ஒருவரிடம் சென்று காமராஜர் தமிழில் பேசப்போகிறார். அதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று அபிப்ராயம் கேட்டுவர அனுப்பி வைத்தார்.
அவரும் காமராஜர் விருப்பப்படி கூட்டத்துக்குள் சென்று ஒருவரிடம் இதைச் சொல்லி விசாரித்தார்.
”காமராஜ்ஜீ – காலாகாந்தி. அவர் ஏழை பங்காளர். எளிமையானவர். எங்களில் ஒருவர். அவர் எந்த பேசினால் என்ன? எங்களைப்பற்றித் தானே பேசப்போகிறார். அவர் முகத்தைப் பார்த்துக் கொண்டே நாங்கள் உட்கார்ந்து இருப்போம்” என்றார்களாம். கேட்டு வந்தவர் காமராஜிடம் சொன்னார்.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவராக்க் காமராஜர் டெல்லி வீட்டில் இருந்து வந்தார். 1966 – ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 7 – ஆம் தேதி, டெல்லியில் பசுவதைத் தடுப்புக் கிளர்ச்சி நடந்தது.
காமராஜர் டெல்லி வீட்டில்தான் இருந்தார். கிளர்ச்சியாளர்கள் காமராஜர் வீட்டைக் கற்காளால் வீசித் தாக்கினார்கள். காவலாளியை அடித்துத் தள்ளிவிட்டு உள்ளே நூழைந்தார்கள். வீடு உள்தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. ஆனால் ஜன்னல்கள் திறந்து இருந்தது.
காமராஜர் மேல் வெறுப்பும், பொறாமையும் கொண்ட அந்தக் கும்பல் ஜன்னல் வழியே தீப்பந்தங்களை வீசினார்கள். வீடு தீப்பிடித்து எரிந்தது. மலை குலைந்தாலும் மனங்குலையாத காமராஜர் வீட்டிற்குள் தான் இருந்தார். படுக்கை மெத்தை தீப்பிடித்தும்கூட அவர் அஞ்சவில்லை. அலறவில்லை. பின்புறக்கதவைத் திறந்து கொண்டு காமராஜர் வெளியேறிவிட்டார்.
இந்தச்சம்பவம் டெல்லியில் காட்டுத்தீபோல் பரவியது. மறுநாள் பார்லிமெண்டிலும் இந்த நிகழ்ச்சி குறித்துக் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டது. ஆனால் காலமெல்லாம் பற்பல எதிர்ப்புகளைச் சந்தித்துச் சகித்துக் கொண்டு மௌனமாக இருந்து வெற்றி கண்டவர் ஆயிற்றே காமராஜர். யாரோ வேண்டாதவர்கள் செய்த இந்த நிகழ்ச்சிக்காக அவர் வேதனைப்படவில்லை.
தமிழ்நாட்டில் காமராஜருக்குப் பின் பக்தவச்சலம் முதலமைச்சராக இருந்து திறம்பட நிர்வாகம் செய்தார். பல திட்டங்களை உருவாக்கி அவைகளை நிறைவேற்றிக்கொண்டிருந்தார்.
இந்த நேரத்தில் மத்திய அரசு தன் இந்திக் கொள்கையை மெல்ல பலதுறைகளில் புகுத்தத் தொடங்கியது. தமிழ்நாட்டில் இந்தி நுழைவதை எதிர்த்து வந்த திராவிட முன்னேற்றக்கழகம், இப்போது முழு மூச்சுடன் எதிர்க்கத் தொடங்கியது.
பல இடங்க்ளில் வன்முறை தலைதூக்கியது. சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட போலீஸ் கடுமையாக நடவடிக்கை எடுத்தது. எதிர்ப்பாளர்களும் மூர்க்கத் தனமான எதிர்ப்பைக் காட்டினார்கள். பல உயிர்கள் பலியாயின. ஆயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு அதிகரித்தது. அரிசி கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டார்கள். விலைவாசிகள் வேறு என்றுமில்லாத அளவிற்கு ஏறியிருந்தன. மக்கள் காங்கிரஸ் ஆட்சி மீது வெறுப்படைந்தார்கள்.
திராவிட முன்னேற்றக் கழகத்தோடு இராஜாஜியும், அவரது சுதந்திராக் கடசியும் முஸ்லீம்லீக்கட்சியும் சேர்ந்துகொண்டன.
திராவிட முன்னேற்றக்கழகத்தினர் மேடைதோறும் ஏறி, ”நாங்கள் ஆட்சிக்கு வந்தால், இந்தியைத் தமிழ்நாட்டில் நுழையவிடமாட்டோம். விலைவாசிகளைக் குறைப்போம். ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசி போடுவோம்” என்று பேசினார்கள்.
மக்கள் நம்பினார்கள். 1967 – ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. திராவிட முன்னேற்றக் கழகம் 133 இடங்களை பிடித்து ஆட்சியைக் கைப்பற்றியது.
அறிஞர் அண்ணா தமிழகத்தின் முதலமைச்சர் ஆனார்.இந்தத் தேர்தலில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த காமராஜர் சட்டமன்றத்துக்கு போட்டியிட்டு, மாணவர் தலைவர் சீனிவாசன் என்பவரிடம் தோல்வியடைந்தார்.
ஆனால் எதிர்க்கட்சியினர்கள் கூட, காமராஜர் தோற்றிருக்கக்கூடாது” என்று பேசிக்கொண்டார்கள். குழந்தையை தொடையைக் கிள்ளி விட்டுத் தொட்டிலையும் ஆட்டிய கதைபோல் அவர்களது பேச்சும், அனுதாபமும் இருந்தது. தோல்வி கண்டு காமராஜர் துவண்டுவிடவில்லை.
காமராஜர் தனது தோல்வியை மிகச் சாதாரண நிகழ்ச்சியாக கருதி ஒதுக்கிவிட்டார். வேறு யாராக இருந்தாலும், ”தமிழ்நாட்டு மக்கள் நன்றி கெட்டவர்கள், இந்த மக்களின் நல்வாழ்விற்காகத் தானே நான் நேற்று வரை பாடுபட்டேன்” என்று புலம்பியிருப்பார்கள். அரசியல் துறவறம் பூண்டிருப்பார்கள். அல்லது தன்னைத் தோற்கடித்த கட்சியின் மீது சதாசர்வகாலமும் ஏதாவது குற்றம், குறை கூறிக் கொண்டே காலத்தை ஓட்டியிருப்பார்கள். தோல்வியை ஒப்புக்கொண்டு அமைதியாக இருந்தார் காமராஜர். அதுவே அவரது பெருந்தன்மைக்கு சான்றானது.
காமராஜர் சிலநாட்களே ஓய்வு பெற்றிருந்தார். தீவிர அரசியலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அவரால் ஒரேயடியாய் ஓய்ந்து ஒரு மூலையில் உட்கார்ந்து கிடக்கவா முடியும்?
நாகர்கோயில் நாடாளுமன்ற இடைத்தேர்தல் வந்தது. காமராஜர் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகி டெல்லி சென்றார். தான் பிரதமராக்கிய பெண்புலி இந்திராகாந்திக்குப் பின்னால் நாடாளுமன்றத்தில் உட்கார்ந்து அதன் நடவடிக்கைகளைக் கவனித்துக் கொண்டிருந்தார். அங்கேகூட அவர் அதிகம் பேசியது கிடையாது.
1970 – ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறவிருந்தது. இதற்கு யாரை நிறுத்துவது என்று கலந்து ஆலோசனை நடத்த காங்கிரஸ் செயற்குழு பெங்களூரில் கூடியது.
எல்லோரும் நீலம் சஞ்சீவ ரெட்டியை நிறுத்த எண்ணிணார்கள். பிரதமர் இந்திராகாந்தியும் இந்தக் கூட்டத்திற்கு வந்து கலந்து கொண்டிருந்தார். சஞ்சீவ ரெட்டியை நிறுத்துவதற்கு இந்திராகாந்தி எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.
பெங்களூரிலிருந்து டெல்லி சென்றதுமே, இந்திரா காந்தி அவரது அமைச்சரவையில் துணைப் பிரதமாகவும் நிதியமைச்சராகவும் இருந்த மொரார்ஜி தேசாயிடமிருந்த நிதித்துறையைப் பறித்தார். அப்போது குடியரசுத் தனண்த் தலைவராக இருந்து விலகிய வி.வி. கிரியை ஆதரிக்கப் போவதாகவும் அறிவித்தார். எல்லோரும் அவர்களது மனச்சாட்சிப்படி ஓட்டளிக்கும்படி கேட்டுக்கொண்டார்.
இந்திராகாந்தி எண்ணப்படியே வி.வி. கிரி குடியரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நீலம் சஞ்சீவ ரெட்டி தோல்வியடைந்தார்.இந்நிகழ்ச்சியால் காங்கிரஸ் இரண்டாக பிளவுப்பட்டது. ஒன்று இந்திரா காங்கிரஸ் மற்றது பழைய காங்கிரஸ். நிஜலிங்கப்பா பழைய காங்கிரஸ் கட்சித் தலைவராகத் தன் பதவியில் தொடர்ந்தார்.
இந்திரா காங்கிரசுக்கு ஜக ஜீவன்ராம் தலைவரானார். பெருந்தலைவர் காமராஜர் இந்நிகழ்ச்சிகளுக்கு முன்னதாகவே தனது அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டுச் சென்னைக்கே குடிவந்திருந்தார். தேர்தல்களில் போட்டியிட்டார். தற்போது நாகர்கோயில் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்.
காமராஜர் பழைய காங்கிரஸில் தன்னை இணைத்துக்கொண்டார். தன்னால் பிரதமராக்கப்பட்ட இந்திரா காந்தியோடு அவராலை ஒத்துப்போக முடியவில்லை. ஆனால் பிரதமர் இந்திராகாந்திக்கு மட்டும் பெருந்தலைவர் காமராஜரின் மேல் மதிப்பும், மரியாதையும் எப்போதும் இருந்து வந்தது.
இந்திராகாந்தி த்ன்னையும் தனது பிரதமர் பதவியையும் நிலைநிறுத்திக்கொள்ள பல திட்டங்களைத் தீட்டினார். 20 அம்சத் திட்டங்களைக் கொண்டு வந்து ஏழை, எளிய மக்கள் பொருளாதார மேம்பாடு அடையச் செய்தார். வங்கிகளை எல்லாம் தேசிய மயமாக்கினார். மன்னர் மான்யங்களை ஒழித்தார். இந்தியாவோடு பாகிஸ்பான் போர் தொடுத்தது. பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஆயுதங்களைக் கொடுத்து உதவி செய்தது. ஆனால் பிரதமர் இந்திராகாந்தியோ, இந்தியாவில் தயாரான போர்க்கருவிகளைக் கொண்டே போரிட்டு வெற்றிக் கண்டார்.
ஏற்கெனவே காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் பலமிழந்து, செல்வாக்கு இழந்து இருந்தது. இப்போது இரண்டு காங்கிரஸ் கட்சிகளாகித் தேர்தல்களில் போட்டியிட்டு மீண்டும் தொல்விகளையே கண்டது. மாறாக திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி மேல் வெற்றி பெற்றுக்கொண்டிருந்தது.
இந்திராகாந்தி நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தமக்கு வேண்டுமே என்பதற்காக திராவிட இயங்கங்களோடு கூட்டு வைத்துக் கொண்டார். அவர்களும், மாநில அரசுகள் செம்மையாக நடைபெற வேண்டும் என்றால் மத்தியிலே நிலையான ஆட்சி நடக்க வேண்டும் என்பதை உறுதியாக நம்பினார்கள்.
அதனால்தான்,
”நேருவின் மகளே வருக!
நிலையான ஆட்சி தருக!”
என்று இந்திராகாந்திக்கு வரவேற்பு கொடுத்தார்கள்.
இந்திராகாந்தியால் மட்டுமே மத்தியிலே நிலையான ஆட்சியை நடத்த முடியும் என்று அவர்கள் நம்பினார்கள். ஆனால் காமராஜரோ மௌனமாக இருந்து நாட்டில் நடப்பதை எல்லாம் கவனித்துக் கொண்டிருந்தார். அரசியலில் சாதனைகள் செய்தது போதுமென்று ஒதுங்கிவிட்டார் காமராஜர்.